கருணை

 
கருணையானது பிழியப்படுவதன்று. மழைபோல் பொழிவதாகும். அது அளிப்போனையும் பெறுவோனையும் ஆசிர்வதிக்கும்.  அதுவே ஆற்றல்களில் தலைசிறந்த ஆற்றல்.  அதுவே கடவுளின் இலட்சணம்.  நீதியின் கடுமையைத் தணிக்கும் கருணையுடன் கூடிய மனித சக்தியே கடவுள் சக்தியை ஒக்கும். -ஷேக்ஸ்பியர்

கருணை காட்டுபவன் எப்போதும் வெற்றி காண்பான். ஷெரிடன் 

தீயோர் கருணையையும், பேராசைக்காரர் வண்மையையும், கர்விகள் பணிவையும் விரும்புவர் பிறரிடத்தில்.  - கோல்டன் 

கடவுளின் பிரதம லட்சணம் கருணையே.  - பிளச்சர் 

கோழைகள் குரூரமாய் நடப்பர் வீரர்கள் கருணை உடையவர். - ஜான்கே 

இனிய கருணையே பெருந்தன்மையின் அடையாளமாகும். - ஷேக்ஸ்பியர் 
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்