கருணையானது பிழியப்படுவதன்று. மழைபோல் பொழிவதாகும். அது அளிப்போனையும் பெறுவோனையும் ஆசிர்வதிக்கும். அதுவே ஆற்றல்களில் தலைசிறந்த ஆற்றல். அதுவே கடவுளின் இலட்சணம். நீதியின் கடுமையைத் தணிக்கும் கருணையுடன் கூடிய மனித சக்தியே கடவுள் சக்தியை ஒக்கும். -ஷேக்ஸ்பியர்
கருணை காட்டுபவன் எப்போதும் வெற்றி காண்பான். ஷெரிடன்
தீயோர் கருணையையும், பேராசைக்காரர் வண்மையையும், கர்விகள் பணிவையும் விரும்புவர் பிறரிடத்தில். - கோல்டன்
கடவுளின் பிரதம லட்சணம் கருணையே. - பிளச்சர்
கோழைகள் குரூரமாய் நடப்பர் வீரர்கள் கருணை உடையவர். - ஜான்கே
இனிய கருணையே பெருந்தன்மையின் அடையாளமாகும். - ஷேக்ஸ்பியர்
0 கருத்துகள்