முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 27, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலம்

      பின்னர் ஒரு வான்வெளிக் கலைஞர் அவரை நோக்கி, 'காலத்தைப் பற்றிய தங்கள் கருத்து யாது?' என, அவர் விளக்கலுற்றார்.      அளத்தற்கு அரியதும், அளவிட முடியாததுமான காலத்தையும்  உங்களால் அளந்திட முடியும்.      உங்களுடைய ஒழுக்கத்தையும், ஏன் உங்கள் உயிராற்றலின் இயக்கத்தையும், நாழிகைகள், பருவ காலங்கள் இவற்றுக்கேற்ப நேராக்கி நெறியுய்க்கலாம்.      காலத்தையே ஓர் அருவியாக்கி அவ்வருவிக் கரையோரம்       நீங்கள் அமர்ந்து அதன் நீரோட்டத்தைக் காணலாம்.      உங்களுள் வசிக்கும் காலங்கடந்த ஒன்று. வாழ்க்கையின்      காலங்கடந்த தன்மையை உணர்ந்துள்ளது.      நேற்றென்பது இன்றைய நினைவே என்பதும், நாளை என்பது இன்றைய நாளின் கனவே என்பதும் அஃது அறிந்த ஒன்றேயாகும்.      உங்களுள்ளே எந்த ஒன்று இசைபாடிச் சிந்திக்கின்றதோ, அஃது அப் பரந்த வெளியிலே விண்மீன்களைச் சிதறிய அம் முதல் விநாடியின் வரம்பிடையேதான் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிறது.      தன்னுடைய அன்பின் வலிமைக்கு எ...

உரையாடல்

      பின்னர் ஒரு புலவர், 'சொற்பொழிவைப் பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லலுற்றார்:      உங்கள் எண்ணங்களோடு உற்ற அமைதி முடிவடைந்த பின்னரே நீங்கள் பேசுகின்றீர்கள்.      உங்கள் இதயத்தின் தனிமையிலே வசிக்க முடியாத நேரத்தில் எல்லாம் உங்கள் உதட்டினாலே வாழ்கின்றீர்கள்.  பேச்சொலி உங்களுக்கு ஒரு மாறுதலாகவும் பொழுது போக்காகவுமே உள்ளது.      அதிகமான பேச்சால் உங்கள் சிந்தனை பாதிக்கு மேல் கொலை செய்யப்படுகிறது.      ஏனெனில், சிந்தனை என்பது பரந்த வெளியிலே பறக்கும் பறவையாகும்.  வார்த்தைகளாம் கூட்டிலே உண்மையாகவே அது தன் சிறகுகளை விரிக்க இயலுமாயினும் அதனால் பறக்க முடியாது.      உங்களிலே பலர் தனித்திருத்தலுக்கு அஞ்சிப் பேசுபவர்களைத் தேடிப் போகின்றீர்கள்.      தனிமையின் அமைதி அப்படிப்பட்டவர்கள் கண்களுக்குத் தங்கள் ஆத்மாவின் உண்மை உருவை வெளிப்படுத்துகிறது.  எனவே, அவர்கள் அதிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்.      இன்னும் பலர் பேசுவார்கள்.  அவர்கள் பேசும்போது சிந்தனையோ முன்யோ...