முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை 10, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தனிமை

     உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருபொழுதும் தனித்தவராகார்.  - ஸ்ர்பிலிப்       கொள்கை உறுதியாயிருப்பின் தனிமையாயிருப்பது தனிமையாகாது . - அனர்பாஷ்      தன்னந் தனியாய் நிற்பவனைவிட அதிகச் சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது. - இப்சன்     உயர்ந்த எண்ணங்களின் தோழமை உடையோர் ஒருநாளும் தனிமை காண்பதிலர் . - பிலிப்      தனிமையாயிருக்கச் சக்தி இல்லாததினாலேயே சகல துன்பங்களும் விளைகின்றன. - லா புரூயர்      தனிமையாய் வாழ ஏன் நாம் அஞ்ச வேண்டும்? நாம் தன்னந் தனியாய் இறக்கத்தானே சர்வேஸ்வரனுடைய திருவுள்ளம்? - கெபிள்     தர்ம நெறி தவறியவரே தனியாயிருப்பவர். - டைடெரெட்      எந்தக் காலத்திலும் அறிஞர்கள் ஏழைகளினும் அதிகமான எளிய வாழ்க்கையே வாழ்ந்துளர் . - தோரோ      உலகத்தில் வெகு சிலரே தனியாக வாழத் தகுதியுடையவர்.  அவர்களுக்கு உலகத்தின் மாயையை அறியப் போதுமான லௌகிக ஞானமும், சகல மாயையையும் வெறுத்துத் தள்ளப் போதுமான அறவொழுக்கமும். - கௌலி     

துறவு

     இந்த உலகில் மூன்று விதத் துறவுகள் :-      அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு;  அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு; பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு.  இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே . - ரஸ்கின்      எனக்குத் துறவறத்தில் நம்பிக்கை இல்லை.  ரோஜாச்செடியில் முட்களைப் போல் மலரும் அவசியமானதே. கடவுள் உடலை உண்டாக்கிய பொழுது அனாவசியமானது எதையும் அமைத்து விடவில்லை.  - பார்க்கர்