ஆங்கோர் உணவு விடுதிக்கார முதியவர், அவர் முன் வந்து, 'உண்ணுவதைப் பற்றியும் பருகுவதைப் பற்றியும் எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார்: நிலத்தின் புழுதியிலே வாழ்ந்து, ஒளியினாலே நிலைபெற்று நிற்கும் காற்றுத் தாவரம் போல், நீங்கள் வாழ்தல் கூடுமோ? நீங்கள் உண்ணுவதற்காகப் பிற உயிர்களைக் கொல்கின்கிறீர்கள். உங்கள் நீர்வேட்கையைத் தணித்தற்கெனவும் பருகுவதற்கெனவும், பசுவின் பாலைப் பச்சைப் பசுங்கன்றுக்கும் கொடாமல் பறிக்கின்றீர்கள். அவற்றிடையேயும் வாழ்க்கையின் வழிபாடு பின்னிக் கலந்து விளங்கட்டும். உங்கள் இருக்கை ஒரு பலிபீடமாக அமையட்டும். அங்குப் பலியிடப்படும் வயல்வெளிகளின் தூய விளைவுகளும், முல்லை நிலத்தின் கள்ளங் கபடமற்ற கால்நடைகளும், மாந்தர்களின் உள்ளத்திலே உறையும் மிகத் தூயதும் கபடமற்றதுமான ஆத்மாவுக்குப் பலியிடப்படுவதாகட்டும். நீங்கள் ஓர் உயிரை அழிக்கும் போது உங்கள் உள்ளத்திலே இவ்வண்ணம் நினைவ...