முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 11, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வால்ட் விட்மன் கவிதைகள்

 பறவைகள் பாடுகின்றன   (சேவல் - பேடு) ஒளிர்க! ஒளிர்க! ஒளிர்க! மகத்தான ஞாயிறே! உன்னுடைய கதகதப்பைப் பொழிவாயாக! நாங்கள் இருவரும் அதில் ஒன்றாக இணைந்து குளிர் காய்கிறோம். "இருவரும் இணைந்து தென்றல் காற்றோ, வாடைக்காற்றோ ஒளியோடு பகல் வரட்டும் இருளோடு இரவு வரட்டும் தன்வீடோ, அல்லது தாயகத்தின் ஆறோ மலையோ  எந்நேரத்திலும் பாடியபடி நேரத்தைப் பற்றிய கவலையற்று, நாங்கள் இருவரும் ஒருங்கிணைந்துள்ள, அந்த நேரத்திலே பண்ணிசைப்போம்." (பேடு இறந்தபின்) பறவை பாடுகிறது "நிலவோ, தாழத் தொங்குகின்றது அதுதான் நேரம் தாழ்ந்து உதித்தது அது பின்தங்கி விட்டது. அதுதான் காதலாலே, காதலாலே, தன் உள்ளத்திலே பாரத்தைச் சுமக்கிறது என நான் நினைக்கிறேன். ஓ! பைத்தியம் பிடித்தபடி கடல் நிலத்தின் மீது மோதி உந்துகிறது  காதலாலே! காதலாலே! காலத்தைப் பற்றிய நினைவு எந்த ஒரு நாளும் குழந்தை பிறக்காமல் கழிவதில்லை நாள் என்ன? ஒரு நிமிஷமும் ஒரு விநாடியும் கழிவதில்லை பிரேதச் சடலமின்றி நாளும், நிமிஷமும்,  விநாடியும் கழிவதில்லை. மந்தமான இரவுகள் கடந்து போகின்றன. மந்தமான நாட்களும் அங்ஙனமே! படுக்கையிலே நீண்ட நாட்கள் படுத்துக் கிட...

கனவுக் குதிரைகள்

  மனமே கோவில்! மனிதனே தேவன்! உடலில் ரத்தம் ஓடவேண்டும் என்பதுதான் இறைவன் நமக்கு இட்ட கட்டளை! தெருவில் அதனை ஓட விடுவது தெய்வ நிந்தனை! தீபங்களே! நீங்கள்  தெரிந்து கொள்ளுங்கள்... திரிகள் மட்டுமே கருகிக் கொண்டிருக்கின்றன... தூண்டு கோல்கள் சுகமாகத் தூங்குகின்றன! அவரவர் மதக்கொடிகள் அசையட்டும் அழகாய்... வெறியெனும் நெருப்புக்கு விசிறியாய் அல்ல- களைத்தவர் வாழ்விற்குக் கலங்கரை விளக்கமாய்! சிறகுகள் பறவைகள் பறக்கிறதென்றா  சொல்கிறீர்கள்? இல்லை  காற்றில் படிந்துள்ள தூசியைச் சிறகால் துடைத்து விடுகின்றன! வெய்யிலில் புழுங்கும் மேகக் குழந்தைகளுக்கு விசிறி வீசுகின்றன. கூண்டுகளுக்குள்ளே குறுகி விடாமல் சிறகுகள் விசும்பிக் கொண்டு விண்ணெழும் போதுதான் ஆகாயம் மகிழ்ந்து அகலமாகிறது! பகல் ஒரு பைத்தியம் பகல் ஒரு பைத்தியம்... உள்ளதையெல்லாம்  உளறிக் கொட்டுகிறது! இரவு ஒரு ரகசியம்... எல்லாவற்றையும் மூடி மறைக்கிறது! மனிதனே... கையை விரித்துக் காட்டுகிறாய்... உள்ளே  ஒன்றுமே இல்லை... ஒப்புக் கொள்கிறேன்! ஆனாலும் அடுத்தவரைத் தூக்கிவிட இரண்டு தோள்கள் இருக்கிறதே... உள்ளம் ஒரு வெள்ளைத்தாள் வெள்ளைத் ...