முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 22, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தன்னையறிதல்

      அதன் பின் ஒருவர், 'எங்களுக்குத் தன்னையறிதலைப் பற்றிச் சொல்லுங்கள்' என்றார் .  அவர் சொல்லத் தொடங்கினார்:      உங்கள் இதயம் தன்  அமைதியினால், பகல் இரவு ஆகியவற்றின் மறைபொருளை அறியவல்லது. ஆனால் உங்கள் காதுகளோ, அறிவின் இதய ஓலத்தைக் கேட்கத் தாகங் கொண்டனவாக இருக்கின்றன.      நீங்கள் எவற்றை உங்கள் நினைவாற்றலால் அறிந்துள்ளீர்களோ, அவற்றைச் சொற்களால் நீங்கள் அறியமுடியும்.      உங்கள் கனவின் (ஆடை) போர்வையற்ற உடல்களை உங்கள் விரல்களால் நீங்கள் தொடமுடியும்.      உங்களால் இப்படி இயல்வது நல்லதே!      உங்கள் ஆத்மாவினுள் மறைந்துள்ள நீர் ஊற்று, மேலே பொங்கி வழிந்து, கடலை நோக்கி இன்னிசையோடு ஓட வேண்டும்.      அப்போதே உங்களுடைய, எல்லையற்ற ஆழ்ந்த கருத்தின் பெருநிதியம் உங்கள் கண்களுக்கு விளக்கமுறும்.      அனால், உங்களுக்குப் புலப்படாத அப் பெருநிதியத்தைச் சீர்தூக்க எந்த துலாக்கோலையும் நீங்கள் தேட வேண்டா.         உங்கள் அறிவாற்றலின் ஆழத்தை அளந்தறியத்தக்க க...

துயரம்

      பின்னர் ஒரு நங்கை, 'எங்களுக்குத் துன்பத்தைப்  பற்றிச் சொல்லுங்கள் ' என்று கேட்க , அவர் சொல்லத் தொடங்கினார் .     உங்கள் துயரம் என்பது உங்களது பகுத்தறிவை மூடி மறைத்துள்ள புற  ஓட்டினை உடைத்தலே ஆகும்.  பழத்தின் உட்சுளையாகிய  இதயம்,சூரிய ஒளிச் சந்நிதியிலே நிற்பதற்கென, அப் பழத்தின் ஓட்டை உடைக்கும் கல்லைப்  போலவே , துயரத்தை நீங்கள் அறிதல் வேண்டும்.      உங்கள் வாழ்க்கையிலே ஏற்படும் அன்றாட அதிசயங்கள் உங்கள் இதயத்தை வியப்பிலே  நிலைக்கச் செய்ய முடியுமானால், உங்கள் துன்பம் உங்கள் இன்பத்தைவிடக் குறைந்த அளவு அதிசயமானதாக இராது.      உங்கள் வயல்கள் மீது கடந்து செல்லும் பருவ காலங்களைப் போலவே, உங்கள் இதயத்தின் பருவக்காலங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதே.      பின்னரே நீங்கள் உங்கள் துயரமாம் குளிர்காலத்தையும் அமைதியோடு கண்காணிப்பீர்கள் .  உங்கள் துயரத்தின் பெரும்பகுதி நீங்களாகத்  தேர்ந்தெடுத்ததே.      உங்கள் துயரமோ உங்களுள்ளே உள்ள மருத்துவன், பிணி வாய்ப்பட்ட உங்க...

தோற்றுவாய்

       அன்பால் மக்கள்  உள்ளங்களிலே குடி  கொண்டவரும்,  அவர்களால் மதிக்கப்பட்டு  அவர்  காலத்தின்  விடி வெள்ளியாகக்  கருதப்பட்டவருமான  ஆல் முஸ்தபா  என்பவர்,  ஏறத்தாழப் பன்னிரண்டு  ஆண்டுக்  காலம்  ஆர்பலீஸ் என்னும் நகரத்திலே  தங்கித் தம்  தாய்நாட்டுக்குத்  திரும்பத் தகுந்த கப்பலுக்காக  எதிர்நோக்கி இருந்தார்.      பன்னிரண்டாவது ஆண்டிலே  அறுவடைத் திங்களிலே,  ஏழாம் நாளன்று, நகரின்  புற மதில்களைக் கடந்து அவர்  ஒரு குன்றின் மீதேறிக் காண,  ஒரு கப்பல் மூடுபனியூடே  வருவதைக் கண்டார்.      அவருடைய இதயக் கதவுகள்  விரிந்து, மகிழ்ச்சிப்  பெருக்குக்  கடல் கடந்து ஓடியது.  தம்  கண்களை மூடி  அவர், தம்  இதயத்தின் அமைதியிலே  தியானம் செய்தார்.      ஆனால், குன்றிலிருந்து அவர்  கீழ் இறங்கிய போழ்து,  அவர்.   மனத்துள் கவலை புகவேே,  நினைக்கலுற்றார் :  நான் எவ்வண்ணம் அமைத...