முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 8, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொடுத்தலும் கொள்ளலும்

     பின்னர் ஒரு வணிகன், ' கொடுத்தலைப்   பற்றியும், கொள்ளுதலைப் பற்றியும்  எங்களுக்குக் கூறுங்கள் ' என , அவர் கூறத் தொடங்கினார்.      உங்களுக்காக நில நல்லாள் தன் பலன்களைத்  தருகிறாள்.  நீங்கள் உங்கள் கைகளை  எவ்வண்ணம் நிரப்பிக் கொள்வதென  அறிந்தால் போதும்.  நீங்கள் தாழ்ச்சியுற மாட்டீர்கள்.      மண் தந்த வளத்தைப் பரிமாறிக்  கொள்வதிலேயே நீங்கள் அளவற்ற வளத்தைக்  கண்டு திருப்தி உறுவீர்கள்.      ஆயினும் அந்தப் பரிமாறுதல் தான் அன்போடும்  கருணை வாய்ந்த நீதியின் மூலமும்  நடைபெற வில்லை எனின், அது சிலரைப்  பேராசைக்கும் மற்றும் பலரைப் பசிப்பிணிக்கும் ஆளாக்கி விடும்.      அங்காடி வீதியிலும், கடலிலும், வயலிலும்,  திராட்சைத் தோட்டத்திலும் உழைக்கும்  உழைப்பாளிகளாகிய நீங்கள்,  நெசவாளர்களையும், குயவர்களையும்,  வாசனைத் திரவியம் சேகரிப்பவர்களையும்  காணும் போது, அந்த நேரத்திலே, உங்கள்  மத்தியிலே வந்து உங்கள் துலாக் கோலைத்   தூயதாக்கிப் ...

உடைகள்

      அடுத்து ஒரு நெசவாளி  அவரை நோக்கி ,  'ஆடைகளைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார்:      உங்கள் ஆடைகள் உங்களது அழகின் பெரும் பகுதியை மறைத்து விடுகின்றன.  ஆனால்,  உங்கள் அழகின்மையையோ அவை மறைப்பதே இல்லை.      உங்கள் உடைகளிலே, தனிமையில் இருந்து  விடுதலையை  நீங்கள் தேடிய போதிலும்  அவற்றிடையே  ஒரு கடிவாளமமும் ஒரு கால் விலங்கும் உள்ளதைக்  காண்பீர்கள்.      நீங்கள் ஞாயிற்றையும் காற்றையும் குறைந்த  ஆடையுடனும் அதிகமாகத் திறந்த உடலோடும்  காண - சந்திக்க- இயலாதா?      ஏனெனில் வாழ்க்கையின் மூச்சு, ஞாயிற்றின்  ஒளியிலும் வாழ்க்கையின் கைகள் காற்றிலும்  அல்லவோ உள்ளன.      உங்களில் சிலர் நாம் அணிந்துள்ள ஆடையை  வாடைக் காற்று தான் செய்தது என்று சொல்கிறீர்கள்.      நானும் கூறுவேன் வாடைக்காற்றே அதை நெய்தது.      ஆனால், வெட்கமே அதன் தறியாகவும்  மிருதுவாக்கப்பட்ட தசை நாய்களே அதன்  இழை...