முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்பமும் துன்பமும்

       அடுத்தபடி ஒரு மடந்தை அவரை நோக்கி 'ஐயா!  இன்பத்தைப் பற்றியும் துன்பத்தைப் பற்றியும்  எமக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்வார்:      உங்களது இன்பங்கள் யாவும் முகத்திரை  களையப்பட்ட துன்பங்களே.      உங்களது இதயத்தின் நிறைவினின்று எது  உங்கள் சிரிப்புக்கும் களிப்புக்கும் காரணமாக  இருந்ததோ அதுவே உங்கள் கண்களைக்  கண்ணீரால் நிறைக்கவும் காரணமாகலாம்.      மற்று  வேறெப்படி இருக்க முடியும்?      துன்பம் உங்கள் உள்ளத்தின் எவ்வளவு அடி   ஆழத்தில் உளைகின்றதோ  அவ்வளவுக்கு அதிகமான இன்பத்தை நீங்கள்  அடைகின்றீர்கள்.      நீங்கள் பழரசத்தை ஏந்திப் பருகும் அந்தக்  குவளை, குயவனாள் சூளையிலே வேகவைத்து  எடுக்கப்பட்டது அன்றோ?      உங்கள் இதயத்தை இன்னிசையால்  பரவசப் படுத்தும் அந்த வேய்ங்குழல் கத்தியால்  வெட்டிச் சீவி, துளையிட்டுச் செப்பஞ்  செய்யப்பட்டது தானே?      நீங்கள் மகிழ்ச்சியில் மைந்துறும் போது உங்கள்...

பணி

     நீங்கள் பணியில் ஈடுபடுவதால் பூமியோடும்       பூமியின் ஆன்மாவோடும் நீங்கள் பயணிக்க       முடிகிறது.  முடங்கி கிடப்பது நடக்கும் பருவ  காலங்களுக்கு அந்நியமாவதாகும் .  எல்லையில்லாத ஒன்றுக்கு  பெருமையோடு  கீழ்படிந்து அதை நோக்கி கம்பீரமாக  நடைபோட்டு செல்லும் பேரணியிலிருந்து  விலகுவதாகும்.      நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது  ஒரு  புல்லாங்குழல் ஆகிறீர்கள், உங்கள் இதயத்தின்  வாயிலாக காலத்தின் முனுமுனுப்புகள்  இசையாக மாறுகிறது .  உங்களில் யார்  துளைகள் அற்ற மூங்கிலாகவே, அமைதியாக, பேச முடியாமல் இருக்க விரும்புகிறீர்கள்,  மற்றவை எல்லாமே இசைந்து பாடும் போது .      உங்களுக்கு எப்போதும் கூறப்பட்டு  இருக்கிறது, பணி என்பது ஒரு சாபம் என்றும்  உழைப்பில் ஈடுபட வேண்டியிருப்பது ஒரு  துரதிட்டம்  என்றும்.      ஆனால், நான் சொல்கிறேன் நீங்கள் பணியில்  ஈடுபடும்போது தொலைவில் இருக்கும் பூமியின்  கனவை ...