முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 29, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்லனவும் தீயனவும்

      அதன்பின், அந்நகரத்தின்  முதியவர்களுள் ஒருவர், 'நல்லன, தீயனவற்றைப்பற்றி எங்களுக்கு விளக்குங்கள்' என, அவர் கூறுவார்.     உங்களுள் உள்ள நல்லதைப்பற்றி மட்டுமே நான் கூற முடியும்.  ஆனால் தீமையைப் பற்றியல்ல.     ஏனெனில், தன்னுடைய பசியாலும் தாக்கத்தாலும் சித்திரவதை செய்யப்பட்ட நன்மையின் வேறுருவமே தீமை என்பது அல்லாமல், தீமை என்பது வேறென்ன?     உண்மையாகவே, நன்மையானது தான் பசியோடிருக்கும் போது , தன் உணவை இருண்ட குகைகளிலும் கூடத் தேடுகின்றது; தண்ணீரில்லாமல் நா வறண்டு தாகம் எடுக்கும் போது, நச்சு நீரைக் கூடப் பருகுகின்றது.     நீங்கள் உங்களுள் ஒன்றி நிற்கும் நல்லவர்கள்.     ஆனால், உங்களோடு நீங்கள் ஒன்றி நிற்காமலிருக்கும் போதும் நீங்கள் கெட்டவர்கள் அல்லர்.     ஏனெனில், பகுக்கப்பட்ட வீடு திருடர்களின் குகை அன்று.  அஃது இரண்டாக்கப்பட்ட ஒரு வீடு தான்.     சுக்கான் இல்லாத கப்பல் இலக்கில்லாமல் ஆபத்து நிறைந்த பல தீவுகளுக்கிடையே திரிந்தாலும் கடலின் அடித்தளத்திற்கு மூழ்கிப் போகாது.     உங்களையே த...