கடவுள் தன்னில் காணாதவனுக்குக் கடவுள் இல்லை . - டால்ஸ்டாய் மக்களிடையே கடவுளை நாடுக. - நோவாலிஸ் நானில்லையானால் கடவுளும் இருக்க முடியாது. - எக்கார்ட் கோவிலில் வைத்துக் கும்பிடும் கடவுளை மனிதனே சிருஷ்டித்தான். அதனால் மனிதன் தன்னைப் போலவே கடவுளையும் படைத்திருக்கிறான். - ஹெர்மீஸ் கடவுள் கோவில் கட்டும் இடத்தில் எல்லாம் சாத்தானும் ஒரு கோவில் கட்டிவிடுகிறான். அதுமட்டுமா? அவன் கோவிலுக்கே அடியார்களும் அதிகம். - டீபோ மனிதனுக்கு எத்துணைப் பைத்தியம்! ஒரு புழுவைச் சிருஷ்டிக்க முடியாது. ஆயினும் கணக்கில்லாத கடவுளரைச் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கிறான். - மான்டெய்ன் கடவுள் தகுதி உடையவர்க்குத் தாட்சண்யம் காட்டுவார். தகுதி அற்றவர்களே நியாயத்தை மட்டும் வழங்குவர். - பிளாட்டஸ் தெய்வபக்தி லட்சியமன்று, சாதனமே. அந்தச் சாதனத்தால் ஆன்ம விருத்தி அடையலாம்.வேஷதாரிகளே தெய்வ பக்தியை லட்சியமாகச் செய்து கொள்வர். - க...