முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 30, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஈகைத்திறன்

       அங்குள்ள ஒரு செல்வந்தர், அவரை நோக்கி,  'ஐயா! ஈகையைப் பற்றி எங்களுக்குச்  சொல்லுங்கள்' என்றார்.  அவர் சொல்லலுற்றார்:      உங்களுக்குரிய உடைமையிலிருந்து நீங்கள்  கொடுக்கும்போது       நீங்கள் மிகக் குறைவாகத் தான்  கொடுப்பவர்கள் ஆவீர்கள்.      ஆனால், நீங்கள் உங்களையே பிறருக்குக்  கொடுத்துவிடும்       போது தான் நீங்கள் உண்மையான  கொடை  வள்ளல்கள்.      உங்கள் உடைமை என்பது என்ன?  நாளைக்கு  உங்களுக்கு இவை இவை தேவைப்படும்  என்பதாகக் கருதிப் பொருளை அச்சத்தோடு  காப்பாற்றி வருவதன்றோ உடைமை என்பது.      நாளை, இந்த நாளை என்பது என்ன?      யாத்திரீகர்களைத் தொடர்ந்து செல்லும் மிக  விழிப்பான நாய் தனக்குத் தேவைப்படும் எனக்  கருதி நெறியற்ற மணல் வெளியிலே எலும்புத்  துண்டுகளைப் புதைத்து வைத்து அந்த  யாத்திரீகர்களைத் தொடர்ந்து சென்றுவிட்டால்  அந்த எலும்புத் துண்டுகள் மறுநாள் அந்த  வி...

குழந்தைச் செல்வம்

      தன் மார்பிலே ஒரு குழந்தையை அணைத்த  வண்ணம் அங்கு நின்றிருந்த ஒரு தாய் அவரை  நோக்கி, 'ஐயா, எங்களுக்குக்  குழந்தைகளைப் பற்றிச் சொல்லுங்கள்' என,  அவர் சொல்லலுற்றார் :      உங்கள் குழந்தைகள்  உங்கள் குழந்தைகள்  அல்லர்.       அவர்கள் அனைவரும் தங்களுக்காகவே  ஏக்கமுற்றிருக்கும் வாழ்க்கையின் புதல்வரும்  புதல்வியருமே ஆவர்.  அவர்கள் உங்கள்  மூலமாக வந்தார்களே  அல்லாமல்  உங்களிலிருந்து வந்தவர்கள் அல்லர்.      அவர்கள் உங்களுடனே இருந்த போதிலும்  உங்களுடைய உடைமைகள் அல்லர்.      நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டுமே  கொடுக்கலாம். உங்கள் எண்ணங்களை அல்ல.  ஏனெனில், அவர்களுக்கென வேறு  எண்ணங்கள் உள்ளன.      அவர்கள் உயிர்களுக்கல்ல. உடல்களுக்கு  மட்டுமே, நீங்கள் இருப்பிடம் தரலாம்.  ஏனெனில்,   அவர்களின் உயிர் (ஆத்மா) நாளை என்னும்  வீட்டிலே தான் உள்ளது.  நீங்களோ உங்கள்  கனவிலுங் கூட அங்குச் செல்லு...