முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தைச் செல்வம்

      தன் மார்பிலே ஒரு குழந்தையை அணைத்த வண்ணம் அங்கு நின்றிருந்த ஒரு தாய் அவரை நோக்கி, 'ஐயா, எங்களுக்குக் 
குழந்தைகளைப் பற்றிச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லலுற்றார் :

     உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர். 

     அவர்கள் அனைவரும் தங்களுக்காகவே ஏக்கமுற்றிருக்கும் வாழ்க்கையின் புதல்வரும் புதல்வியருமே ஆவர்.  அவர்கள் உங்கள் 
மூலமாக வந்தார்களே  அல்லாமல் உங்களிலிருந்து வந்தவர்கள் அல்லர்.

     அவர்கள் உங்களுடனே இருந்த போதிலும் உங்களுடைய உடைமைகள் அல்லர்.

     நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டுமே கொடுக்கலாம். உங்கள் எண்ணங்களை அல்ல. ஏனெனில், அவர்களுக்கென வேறு 
எண்ணங்கள் உள்ளன.




     அவர்கள் உயிர்களுக்கல்ல. உடல்களுக்கு மட்டுமே, நீங்கள் இருப்பிடம் தரலாம்.  ஏனெனில்,  அவர்களின் உயிர் (ஆத்மா) நாளை என்னும் வீட்டிலே தான் உள்ளது.  நீங்களோ உங்கள் கனவிலுங் கூட அங்குச் செல்லுதற்கு இயலாது.

     நீங்கள் அவர்களைப் போல் இருக்கப் போராடலாம். ஆனால், உங்களைப்போல் அவர்களை ஆக்க முயலாதீர்கள்.

     ஏனெனில், வாழ்க்கை பின்னோக்கிப் போவதுமில்லை;நேற்றோடு தங்கிவிடத் தாமதிப்பதும் இல்லை.

     உங்கள் குழந்தைகளாகிய அம்புகளை எய்யும் வில்லாகவே நீங்கள் இருக்கின்றீர்கள். வேடனோ முடிவற்ற நெறியிலுள்ள குறியை இலக்கு வைத்துத் தன் அம்பு வேகமாகவும் தூரமாகவும் செல்லத் தக்கவாறு உங்களைத் (வில்லை) தன் பலங்கொண்ட மட்டும் வளைத்து 
அம்பெய்கிறான்.

     வேடன் கையிலுள்ள வில்லாகிய உங்களது வளைவு கூட மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கட்டும்.

     அவ்வேடன் பறந்து தூரத்திலே செல்லும் அம்பை எப்படி நேசிக்கிறானோ அப்படியே தன் கையிலுள்ள வில்லையும் அன்றோ நேசிக்கிறான்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...