முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 23, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருமணம்

  திருமணம்       நீங்கள் அனைவரும் இணைந்தே பிறந்தீர்கள்.   இனி எப்போதும் இணைந்தே இருப்பீர்கள்.      உங்களுடைய வாழ்நாள்களை மரணம் தன்  வெண் சிறகுகளால் சிதற அடிக்கும் காலத்தும்  இணைந்தே இருப்பீர்கள்.      ஆம், இறைவனுக்கான அமைதி மிக்க தியான  நேரத்திலும் நீங்கள் இணைந்தே இருப்பீர்கள். ஆனாலும், உங்கள் இணைப்பின் இடையே  சிறிது இடைவெளி இருக்கட்டும்.  அந்த  இடைவெளியிலே வானுலகத்தில் காற்று  நடனம் புரியட்டும்.      ஒருவரை ஒருவர் காதலியுங்கள்.  ஆனால், அக்  காதலினால் பிணிப்பான தளையை  உண்டாக்கிக் கொள்ளாதீர்கள்.      அக் காதல் உங்கள் உயிராற்றங் கரைகளிலே  அலை மோதும் கடலாக விளங்கட்டும்.      நீங்கள் ஒருவருக்கொருவர் மற்றொருவருடைய  குவளையை நிரப்புங்கள்.  ஆனால், ஒரே  குவளையிலுள்ள பானத்தை இருவரும்  பருகாதீர்கள்.     அதைப்போலவே, தனக்குரியதான உணவையும்  ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுங்கள். ஆனால், ஒரே அப்பத் துண்டின...

அன்பு

 அன்பு       அன்பினது வழி கரடுமு ரடாகவும்   பள்ளத்தாக்குகள் நிறைந்ததாகவும் இருப்பினும், அன்பு உங்களை அழைக்கும் போது  அதைப்  பின்பற்றிச் செல்லுங்கள். அந்த அன்பு  தன்னுடைய சிறகுகளால் மூடி உங்களைப்  பாதுகாக்கும் போது , அதனிடையே நீங்கள்  உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதன் சிறகுகளின் இடையிலே மறைந்துள்ள குத்துவாள்  உங்களை ஊறு  செய்தாலும் அதனால் பாதகமில்லை.      அன்பு உங்களுடன் உரையாடும்போது அதன்  குரலொலி உங்கள் கனவுகள் அனைத்தையும்  வாடைக்காற்று பூங்காவை அழித்து விடுவதைப்  போலச் சிதறச் செய்வது போல் இருப்பினும்  நீங்கள் அதன் வார்த்தையை நம்புங்கள்.  ஏனெனில், அன்பு எப்படி உங்களுக்கு முடி  சூட்டுகிறதோ அப்படியே உங்களை அழிக்கிறது.   அது எவ்வண்ணம் உங்களை வளர்க்கிறதோ   அவ்வண்ணமே உங்களைத் தேய்க்கிறது.      உங்களின் உச்சிக்கு அது உயர்ந்து சூரியன் முன்  அசைந்தாடும் பசிய இளந்தளிர்களை எல்லாம்  எங்கனம் அது தடவிக் கொடுத்துத் தழுவி  நிற்க...