முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 9, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

  பாரதிதாசன் ஒரு பார்வை நீ எதைப்பற்றிதான்? எழுதவில்லை? பூமியின் தோள்களில் வெய்யில் தூரிகையால் தொய்யில் எழுதுமே விடிகாலை.... அதைப்பற்றி வெப்பப் பகலை வீழ்த்திய ஒரு புரட்சிக்குப் பிறகு.... உறைந்த ரத்தக்களமாய் குளிர்ந்து கிடக்குமே அந்தி அதைப்பற்றி காற்று வாங்க வருவோர்க்கு அலைச்சா மரங்கள் வீசுமே  கடல்.... அதைப்பற்றி ஓ! எதைப்பற்றித்தான் நீ எழுதவில்லை இலையுதிர் காலம் ஆண்டுக்கொரு முறை.... வெளிநாடு போனவள் வீட்டுக்கு வருவாள்! வந்ததும் வராததுமாய் மரக் காலண்டரின் அத்தனை தாள்களையும் மொத்தமாய்க் கிழிப்பாள்! நட்சத்திரங்கள் விடியல் - தன் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒரேமூச்சில் ஊதி  அத்தனை மெழுகுவத்திகளையும் அணைத்து விடுகிறதோ? மெழுகுவர்த்தி மரணத்தை வரங்கேட்டா அந்த  உச்சித்தவம் நடக்கிறது? எந்தத் துயரத்தை எழுதியெழுதி இப்படி மசிகசிகிறது இந்தப்பேனா? கண்டு சொல்லுங்கள்! கண்ணெதிரே நடப்பதென்ன கொலையா? தற்கொலையா? எப்பொழுதுமே இதற்குத் தேய்பிறையென்றால் இது என்ன  சபிக்கப்பட்ட நிலவா? கண்ணீர் மருந்தாமோ? அழுவதை நிறுத்து அன்பே! காதலின் கடலோரம் எப்போதும் புன்னகை என்னும் முத்துக்குளித்தே பழக்கப்பட்ட ந...