கடவுள் தன்னில் காணாதவனுக்குக் கடவுள் இல்லை . - டால்ஸ்டாய்
மக்களிடையே கடவுளை நாடுக. - நோவாலிஸ்
நானில்லையானால் கடவுளும் இருக்க முடியாது. - எக்கார்ட்
கோவிலில் வைத்துக் கும்பிடும் கடவுளை மனிதனே சிருஷ்டித்தான். அதனால் மனிதன் தன்னைப் போலவே கடவுளையும் படைத்திருக்கிறான். - ஹெர்மீஸ்
கடவுள் கோவில் கட்டும் இடத்தில் எல்லாம் சாத்தானும் ஒரு கோவில் கட்டிவிடுகிறான். அதுமட்டுமா? அவன் கோவிலுக்கே அடியார்களும் அதிகம். - டீபோ
மனிதனுக்கு எத்துணைப் பைத்தியம்! ஒரு புழுவைச் சிருஷ்டிக்க முடியாது. ஆயினும் கணக்கில்லாத கடவுளரைச் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கிறான். - மான்டெய்ன்
கடவுள் தகுதி உடையவர்க்குத் தாட்சண்யம் காட்டுவார். தகுதி அற்றவர்களே நியாயத்தை மட்டும் வழங்குவர். - பிளாட்டஸ்
தெய்வபக்தி லட்சியமன்று, சாதனமே. அந்தச் சாதனத்தால் ஆன்ம விருத்தி அடையலாம்.வேஷதாரிகளே தெய்வ பக்தியை லட்சியமாகச் செய்து கொள்வர். - கதே
பரிபூரண நிலையில் ஆன்மாவுக்கு ஏற்படும் சொற்ப அவாவை வைத்தே கடவுள் இருப்பதைக் கணித சாஸ்திர முறையைக் காட்டிலும் அதிகமாய் நிரூபித்துக் காட்டலாம். - ஹெம்ஸ்டர் ஹூஸ்
'அவன்' என்னும் மொழி அவனைக் குறைத்து விடுகிறது. - டால்ஸ்டாய்
ஆண்டவன் இலன் எனினும் அறநெறி நிற்போம் என்பவரே அவன் அடியராவர் . ராபர்ட் பிரௌனிங்
ஒருவன் கடவுள் பக்கம் இருப்பின், அவன் ஒருவனே பெரும்பான்மைக் கட்சி ஆகிவிடுவான். - வெண்டெல் பிலிப்ஸ்
ஆன்மாவுக்கு வெளியே கடவுளைத் தேடினால் கடவுளின் விக்கிரகங்களை மட்டுமே காண்பாய். ஆன்மாவை ஆராய்ந்தால் அங்குள்ள உணர்ச்சிகளும் எண்ணங்களும் ஆண்டவனை அறிவிக்கும். அயலார்க்கு நன்மை செய்யும் பொழுதுதான் ஆண்டவனைத் துதிப்பதாகக் கூறமுடியும். - ஸ்வனரோலா
தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம். - சாக்ரடீஸ்
பரிபூரணம் தேவரை அளக்கும் கோல். பரிபூரணத்தில் பற்றே மனிதரை அளக்கும் கோல். - கதே
ஆன்ம எளிமை கண்டே ஆண்டவன் மகிழ்கிறான். எளிமைக் குணத்தைக் கண்டுதான் மகிழ்கிறான்; இறக்கும் குணத்தைக் கண்டன்று. - கதே
குழந்தை இயல்புடையவர் - அதாவது எளிதில் மகிழ்பவர், அன்பு செய்பவர், பிறர்க்கும் மகிழ்வூட்டுபவர். இவர்க்கே கடவுள் ராஜ்யம். - ஆர்.எல். ஸ்டீவன்ஸன்
கடவுள் பார்ப்பதைப் போல் எண்ணி மனிதரோடு வாழ்க. மனிதர் கேட்பதைப் போல் எண்ணிக் கடவுளோடு பேசுக. - செனீகா
மனிதர் அறிய விரும்பாதது எதையும் கடவுளிடம் கேட்காதே. கடவுள் அறிய நீ விரும்பாதது எதையும் மனிதனிடம் கேட்காதே. - செனீகா
வட்டத்தில் எந்தவிடத்திலிருந்தும் மத்திக்குச் செல்ல வழியுண்டு. எவ்வளவு பெருந் தவறானாலும் இறைவனிடம் செல்ல வழியுண்டு. - ரூக்கர்ட்
கடவுளை அறிதல், கடவுளிடம் அன்பு செலுத்துதல் இரண்டிற்கும் இடையிலுள்ள தூரம் எவராலும் இவ்வளவு என்று சொல்ல முடியாது. - பாஸ்கல்
கடவுளை அறிந்து விடுவோமென்று எதிர்பார்க்க இயலாது. ஆனால், கடவுளை அறியாமல் வேறு எதையும் அறியவும் எதிர்பார்க்க இயலாது. - பூடின்
மனிதர்க்குப் பேருணர்ச்சி தந்து போருக்கு நடத்திச் செல்லும் மூன்று மொழிகள் கடவுள், நித்யத்வம், கடமை என்பன. முதல் விஷயம் அறிவுக்கு அப்பாற்பட்டது.
இரண்டாவது நம்ப முடியாதது, மூன்றாவது ஒரு காலும் அலட்சியம் செய்ய முடியாதது. - மையர்ஸ்
ஏதேனும் பழுதிலாத ஒன்றை இயற்ற முயல்வதைப் போல் ஆன்மாவைப் புனிதமாக்குவதும் சமய வாழ்வு வாழச் செய்வதுமானது வேறெதுவும் இல்லை. ஏனெனில் பரிபூரணமே கடவுள். அதனால் பூரணத்தை நாட முயல்பவன் கடவுள் தன்மையை நாடுபவனாவான்.- மைக்கேல் ஏஞ்சலோ
கடவுளின் நீதி மெதுவாகத்தான் நகரும். ஆனால் ஒருபொழுதும் வழியில் தங்குவதில்லை. தவறு செய்தவனைச் சேர்ந்தேவிடும். - ராபர்ட் பிரௌனிங்
0 கருத்துகள்