அடுத்து ஒரு நெசவாளி அவரை நோக்கி , 'ஆடைகளைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்' என, அவர் சொல்லத் தொடங்கினார்:
உங்கள் ஆடைகள் உங்களது அழகின் பெரும் பகுதியை மறைத்து விடுகின்றன. ஆனால், உங்கள் அழகின்மையையோ அவை மறைப்பதே இல்லை.
உங்கள் உடைகளிலே, தனிமையில் இருந்து விடுதலையை நீங்கள் தேடிய போதிலும் அவற்றிடையே ஒரு கடிவாளமமும் ஒரு கால்
விலங்கும் உள்ளதைக் காண்பீர்கள்.
நீங்கள் ஞாயிற்றையும் காற்றையும் குறைந்த ஆடையுடனும் அதிகமாகத் திறந்த உடலோடும் காண - சந்திக்க- இயலாதா?
ஏனெனில் வாழ்க்கையின் மூச்சு, ஞாயிற்றின் ஒளியிலும் வாழ்க்கையின் கைகள் காற்றிலும் அல்லவோ உள்ளன.
உங்களில் சிலர் நாம் அணிந்துள்ள ஆடையை வாடைக் காற்று தான் செய்தது என்று சொல்கிறீர்கள்.
நானும் கூறுவேன் வாடைக்காற்றே அதை நெய்தது.
ஆனால், வெட்கமே அதன் தறியாகவும் மிருதுவாக்கப்பட்ட தசை நாய்களே அதன் இழையாகவும் இருந்தன.
நெசவாளியாகிய அவ் வாடைக்காற்று, தன் நெசவுத் தொழில் முடிந்த பின்னர்க் கானகத்திலே நின்று உரக்கச் சிரித்தது.
நாணுடைமை என்பது தூய்மையற்ற பார்வைக்கு எதிரான கேடயம் தான் என்பதை மறவாதீர்கள்.
தூய்மையற்ற தன்மையே இல்லாமல் போகுமானால், நாணுடைமை என்பது உள்ளத்தின் தளையும் சாக்கடையும் அல்லாமல் வேறென்ன?
இந்த மண் உங்கள் வெறுங் கால்களைத் தீண்டுதலாலே மகிழ்ச்சி உறுகின்றதென்பதையும், காற்று உங்கள் தலை முடியோடு விளையாடுவதற்கே ஏங்குகின்ற தென்பதையும் நீங்கள் மறவாதீர்கள்.
0 கருத்துகள்