முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வால்ட் விட்மன் கவிதைகள்

 பறவைகள் பாடுகின்றன   (சேவல் - பேடு)
ஒளிர்க! ஒளிர்க! ஒளிர்க!
மகத்தான ஞாயிறே!
உன்னுடைய கதகதப்பைப் பொழிவாயாக!
நாங்கள் இருவரும்
அதில் ஒன்றாக இணைந்து குளிர் காய்கிறோம்.

"இருவரும் இணைந்து
தென்றல் காற்றோ, வாடைக்காற்றோ
ஒளியோடு பகல் வரட்டும்
இருளோடு இரவு வரட்டும்
தன்வீடோ, அல்லது
தாயகத்தின் ஆறோ மலையோ 
எந்நேரத்திலும் பாடியபடி
நேரத்தைப் பற்றிய கவலையற்று,
நாங்கள் இருவரும் ஒருங்கிணைந்துள்ள,
அந்த நேரத்திலே பண்ணிசைப்போம்."

(பேடு இறந்தபின்) பறவை பாடுகிறது

"நிலவோ, தாழத் தொங்குகின்றது
அதுதான் நேரம் தாழ்ந்து உதித்தது
அது பின்தங்கி விட்டது.
அதுதான் காதலாலே, காதலாலே,
தன் உள்ளத்திலே பாரத்தைச் சுமக்கிறது
என நான் நினைக்கிறேன்.
ஓ! பைத்தியம் பிடித்தபடி
கடல் நிலத்தின் மீது மோதி உந்துகிறது 
காதலாலே! காதலாலே!

காலத்தைப் பற்றிய நினைவு

எந்த ஒரு நாளும் குழந்தை பிறக்காமல் கழிவதில்லை
நாள் என்ன? ஒரு நிமிஷமும்
ஒரு விநாடியும் கழிவதில்லை
பிரேதச் சடலமின்றி நாளும்,
நிமிஷமும்,  விநாடியும் கழிவதில்லை.
மந்தமான இரவுகள் கடந்து போகின்றன.
மந்தமான நாட்களும் அங்ஙனமே!

படுக்கையிலே நீண்ட நாட்கள் படுத்துக் கிடந்த
துன்பவேதனை கடந்துவிட்டது
மருத்துவர் தன்னுடைய நீண்ட தவணைக்குப்பிறகு
மௌனமான பீதி நிறைந்த பார்வையையே
தன் பதிலாகத் தருகிறார்.
...................

வெட்டவெளிப்பாதை

கடந்தகாலம், எதிர்காலம், மேன்மை,அன்பு,
இவைகளுள் நீ சூனியமாக இருப்பின்
இவையாவும் உன்னுள் சூனியமே!
ஒவ்வொரு பொருளின் உட்கருவே
அதை ஊட்டி வளர்க்கிறது.
உனக்காகவும், எனக்காகவும்,
- நம்மை மூடியுள்ள- உமியை நீக்கக் கூடியவன்
எங்கே இருக்கிறான்?





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...