உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருபொழுதும் தனித்தவராகார். - ஸ்ர்பிலிப்
கொள்கை உறுதியாயிருப்பின் தனிமையாயிருப்பது தனிமையாகாது . - அனர்பாஷ்
தன்னந் தனியாய் நிற்பவனைவிட அதிகச் சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது. - இப்சன்
உயர்ந்த எண்ணங்களின் தோழமை உடையோர் ஒருநாளும் தனிமை காண்பதிலர் . - பிலிப்
தனிமையாயிருக்கச் சக்தி இல்லாததினாலேயே சகல துன்பங்களும் விளைகின்றன. - லா புரூயர்
தனிமையாய் வாழ ஏன் நாம் அஞ்ச வேண்டும்? நாம் தன்னந் தனியாய் இறக்கத்தானே சர்வேஸ்வரனுடைய திருவுள்ளம்? - கெபிள்
தர்ம நெறி தவறியவரே தனியாயிருப்பவர். - டைடெரெட்
எந்தக் காலத்திலும் அறிஞர்கள் ஏழைகளினும் அதிகமான எளிய வாழ்க்கையே வாழ்ந்துளர் . - தோரோ
உலகத்தில் வெகு சிலரே தனியாக வாழத் தகுதியுடையவர். அவர்களுக்கு உலகத்தின் மாயையை அறியப் போதுமான லௌகிக ஞானமும், சகல மாயையையும் வெறுத்துத் தள்ளப் போதுமான அறவொழுக்கமும். - கௌலி
0 கருத்துகள்