பிறர்க்கு இன்பம் அளிப்போரே பாக்கியவான்கள். பிறரிடம் சச்சரவை நீக்கி சாந்தியை விளைவிப்போரே பாக்கியவான்கள். - பீச்சர்
இவர் அனைத்தையும் தியாகம் செய்தார்; அவ்வளவு அதிகமாக அதைச் செய்தார்; அதிகமாக மன்னிக்கவும் இரங்கவும் செய்தார்.யாரையும் துவேசித்ததில்லை. - மாஜினி கல்லறைமீது
சால்பின் சாரம் அறத்தைச் செய்வதற்கு அறமாகிய காரணமே போதும் என்பதே. - எமர்சன்
சான்றோர் என்பவர் குறைகளை அறியாதவர் அல்லர்; குறைகள் இருந்தும் அவைகளைத் திருத்திக் குணங்களை உண்டாக்கிக் கொண்டவரே சான்றோர் ஆவர். - ஷேக்ஸ்பியர்
எனக்குத் தெரிந்தவற்றில் சிறந்ததையும் என்னால் செய்யக் கூடியதில் தலைசிறந்ததையுமே செய்கின்றேன். இறுதிவரை அப்படியே செய்துகொண்டிருப்பேன் . இறுதியில் நான் செய்தது நியாயமாகுமானால் இப்பொழுது எனக்கு விரோதமாகச் சொல்வதெல்லாம் எள்ளளவும் நிற்காது போகும். இறுதியில் நான் செய்தது தவறாய் முடியுமானால் இவர் செய்தாலும் தவறு சரி ஆகிவிடாது. - லிங்கன்
பணம், படிப்பு, பதவி முதலியவைகளில் பிறரைப்போல் இருப்பதே சுகம் என்று எண்ணுகிறோம். ஆனால் கடவுளோ துன்பத்தையும் தோல்வியையும் தந்து நமக்கு உயர்ந்த அன்பையும் உண்மையையும் அறிவித்துச் சான்றோனாக்க முயல்கிறார். - எமர்சன்
சான்றோர் சரிதையை அரை குறையாகவே கற்றாலும் குறையாகவே கற்றாலும் அதனால் நன்மை அடையாமல் இருக்க முடியாது. - கார்லைல்
பெரியோர் எப்பொழுதும் வானிலிருந்து இறங்கும் மின்னலே ஆவர்; மக்கள் எல்லோரும் அவர் வருகைக்காகக் காத்திருப்பர், வந்ததும் அவர்களும் ஜோதியாவர். - கார்லைல்
உயர்ந்த விஷயங்களை எளிய முறையில் கூறுவதே சால்பின் லட்சணம். - எமர்சன்
சங்கடங்களே சான்றோரை நீட்டி அளக்கும் கோல் . - பர்க்பேருண்மைகள் எளியன. அதுபோல் பெரியோரும் எளியர் . சான்றோர் கெட்டாலும் சால்பு அழியாது. - லாங்பெல்லோ
தமது உயர்வை அறியாதவரே சான்றோர். - கார்லைல்
உன்னத லட்சியம் உடைமையும் அதற்காகவே உயிர் வாழ்வதுமே சால்பின் லட்சணம். - ஜார்ஜ் லாங்
0 கருத்துகள்