தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஆச்சரியத்தில் முடிவடையும். முதல் ஆச்சரியம் அறியாமையின் குழந்தை; மற்ற ஆச்சரியம் வணக்கத்தின் தாய். மன்னது நமது அறிவின் பிரசவக் கஷ்டம் இறுதியானது அதன் சுக மரணம். - கோல்ரிட்ஜ்
நுண்ணிய கருத்துக்கள் உடைமை மட்டுமே தத்துவ ஞானம் ஆகிவிடாது. அறிவு கூறும் வழி நிற்க ஆசை உடமையே அதன் இலட்சணம். - தோரோ
வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள் ஆகும். - வால்டேர்
உண்மையான தத்துவ ஞானம், இல்லாததைச் சிருஷ்டிக்காது, உள்ளதையே நிரூபித்து உறுதி செய்யும். - கலின்
தவரான அபிப்பிராயத்தை ஒழிப்பதும், அறிவைத் தூய்மை செய்வதும், நமது அறியாமையின் ஆழத்தை உறுதி செய்வதுமே தத்துவ ஞானத்தின் தொழில். - ஹாமில்டன்
தத்துவ ஞானத்தின் லட்சியம் அறம். - பீட்டர் பெயின்
அறிவின் உதவியின்றி உணர்ச்சி மூலம் நம்பப் படுபவைகளுக்குத் தவறான காரணம் கண்டுபிடிப்பதே தத்துவ சாஸ்திரம். ஆனால் அக்காரணம் காண்பதும் ஓர் உணர்ச்சியே. - ப்ராட்லி
தத்துவ ஞானத்தை 'அறிவை அறியும் அறிவு' என்பர். ஆனால் உண்மையில் அது அறியாமையை அறியும் அறிவே ஆகும். அல்லது கான்ட் கூறுவதுபோல் அது அறிவின் எல்லையை அறியும் அறிவே ஆகும். - மாக்ஸ்முல்லர்
தத்துவ ஞானி போல் பேசுவதும் எழுதுவதும் எளிது; ஆனால் அறிவோடு நடப்பது -அங்குதான் கஷ்டம். - ரைவ ரோல்
தத்துவ ஞானிக்குப் பிறர் யோசனைகளைக் கேட்க விருப்பமும், அவற்றைத் தானே ஆராய்ந்து முடிவு கட்ட மன உறுதியும் வேண்டும். உழைப்பும் இருந்துவிட்டால் இயற்கையின் ஆலயத்திலுள்ள இரகசிய மண்டபத்தினுள் நுழையவும் எதிர்பார்க்கலாம். - பாரடே
தத்துவ ஞானம் கற்பது என்பது, 'தான்' சாகத் தயாராகுவதேயன்றி வேறன்று. - சிசரோ
தத்துவ சாஸ்திரிகள் உலக விவகாரங்களைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டிருப்பர். ஆனால் அதற்கிடையில் உலகை நடத்திச் செல்வன பசியும் காதலுமேயாம். - ஷில்லர்
நமது தத்துவ சாஸ்திரத்தில் நான் கனவு கண்டும் அறியாத பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் உண்டு . - ஷேக்ஸ்பியர்
ஒருவன் யாரிடம் பேசுகின்றானோ அவனுக்குப் பொருள் விளங்காமலும், பேசுகின்ற தனக்குப் பொருள் விளங்காமலும் இருந்தால், பேசுவது தத்துவ சாஸ்திரம் ஆகும் . - வால்டேர்
0 கருத்துகள்