உடல் - அது மண்ணேயன்றி வேறென்று. ஆன்மா - அது நித்தியத்தின் முகை ஆகும். -கல்வெர்வெல்
மனிதனையும் அவன் செயல்களையும் அடக்கி ஆள்வது ஜட சக்தி அன்று, ஆன்மா சக்தியேயாகும். - கார்லைல்
ஆன்மாவின் கதவை ஒரு விருந்தாளிக்கு ஒரு முறை திறந்துவிட்டால், பின் யாரெல்லாம் உள்ளே வந்து புகுவர் என்று கூறிவிட முடியாது. - ஹோம்ஸ்
அறிவு கண்ணில் விளங்கும் - அன்பு முகத்தில் விளங்கும் - ஆனால் ஆன்மா விளங்குவது மனத்தில் கேட்கும் அந்த சிறு குரலிலேயே. - லாங்பெலோ
மனத்தில் உயர்ந்த எண்ணங்களும் இலட்சியங்களும் இருக்குமானால், ஆன்மா உடம்பில் இருக்கும் பொழுதே ஆண்டவன் சன்னிதானத்தில் இருப்பதாகும். - ஸெனிகா
ஆன்மா சூரியனை ஒக்கும். இரவில் அஸ்தமித்து விடுகிறது. கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆனால் வேறு இடத்தில் வெளிச்சம் பரப்புவதற்காகவே சென்றுள்ளது என்பதே உண்மை. - கதே
ஆன்மாவின் செல்வம் அது எவ்வளவு அதிகமாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும்; ஆன்மாவின் வறுமை எவ்வளவு குறைவாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும். - ஆல்ஜர்
நாகரிக முன்னேற்றத்திற்கு வகுக்கப்பட்டுள்ள கருவிகளில் எந்தக் காலத்திலும் சான்றோரின் ஆன்ம சக்தியே தலை சிறந்ததாகும். - ஹாரிஸன்
உழைப்பை மட்டுமே விற்கலாம். ஒருநாளும் ஆன்மாவை விற்கலாகாது . - ரஸ்கின்
ஆன்மா ஆளவில்லையானால், அது தோழனாய் இருக்க முடியாது. அது ஆள வேண்டும், அல்லது அடிமையாய் இருக்க வேண்டும் - அவ்வளவே. வேறெதுவாயும் இருக்க முடியாது. - ஜெரிமி டெய்லர்
ஆன்மாவைப் பற்றிய முக்கிய பிரச்சனை அது எங்கிருந்து வந்தது என்பதன்று; அது எங்கே போகிறது என்பதாகும். அதை அறிய வாழ்நாள் முழுவதும் தேவை. - ஸதே
ஆன்ம அபிவிருத்தி- மனிதனைப் பரிபூரண மாக்குவதே அதன் இலட்சியம். அதனால் அது சரீர வாழ்வையெல்லாம் சாதனமாகத் தாழ்த்திவிடும். - எமர்ஸன்
0 கருத்துகள்