அன்பும் அறமும் எவ்வளவோ சுவர்க்கமும் அவ்வளவே. - பார்க்கர்
சுவர்க்கத்தின் ஆசை ஒருவனைச் சுவர்க்க மயமாய் ஆக்கிவிடும். - ஷேக்ஸ்பியர்
அறம் விரும்பு; அதுவே வீடு. - மில்டன்
மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழுது சுவர்க்கத்தை இப்பூமியிலேயே கண்டு விடலாம். - பேக்கன்
நான் சுவர்க்கத்தில் இருக்க வேண்டுமானால், முதலில் சுவர்க்கம் என்னிடம் காணப்பட வேண்டும். - ஸ்டான்போர்டு
ஆன்மாவுக்கு விமோசனம் சுவர்க்கத்திலேயே என்று நடப்பவன் விமோசனம் பெறுவதில்லை. ஆனால் அன்பு வழியில் அன்பு நெறியில் நிற்பவனை ஆண்டவன் தானே தன் சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்வான். - வான் டைக்
சுவர்க்கத்துக்கு வெகுதூரத்தில் உள்ளது பூமி, பூமிக்கு வெகு சமீபத்தில் உள்ளது சுவர்க்கம். - ஹேர்
வாழ்வில் கற்க வேண்டிய கடின பாடங்களில் ஒன்று உண்டு. அதைப் பெரும்பாலோர் கற்பதில்லை. இங்கேயே நம்மைச் சூழ்ந்தே சுவர்க்கம் உளது என்பதே அந்தப் பாடம் பாடம். - ஜான் பரோஸ்
அறநெறி பற்றிப் பேசுவதன்று, அறநெறியில் நடப்பதுவே சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். - எம். ஹென்றி
உயிரோடு இருக்கும் பொழுது தன் இதயத்தை சுவர்க்கத்துக்கு அனுப்பாதவன், உயிர் போனபின் சுவர்க்கத்துக்குப் போக முடியாது. - பிஷப் வில்ஸன்
எப்பொழுதும் நியாயம் வழங்கும் வள்ளல்கள், எப்பொழுதும் வண்மை உடைய நீதிமான்கள், இவர்கள் முன்கூட்டி அறியாமலே கடவுள் சன்னிதானத்துக்குப் போகலாம். - பழமொழி
சுவர்க்கத்தை நன்கு போற்ற வேண்டுமானால் பதினைந்து நிமிஷமாவது நரக அனுபவம் தேவை. - கார்ல்டன்
0 கருத்துகள்