கடமை

    

கடமையைச் செய்துவிட்டேன்; அதற்காகக் கடவுளைத் துதிக்கிறேன்.  - செல்ஸன் 


    உன் கடமையைச் செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்துகொள்வாய்.  - கதே 


    கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிகாட்டிகள் உள.  இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை.  - அனடோல் பிரான்ஸ் 


சாந்தம், குதூகலம் - இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன.  இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன .  - ஆர். எல். ஸ்டீவன்ஸன் 


    நல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம்.  ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம். - ஸ்தே 

   

பிறர்க்கு நான் செய்ய வேண்டிய கடமை யாது?  அவரை நல்லவராக்குவதா ? நான் ஒருவனைத்தான் நல்லவனாக்க வேண்டும்.  அவன் நானே.  பிறர்க்குச் சந்தோஷம் அளிப்பதே அவர்க்கு நான் செய்யக்கூடிய கடமையாகும்.   - ஆர். எல். ஸ்டீவன்ஸன் 

    செய்ய இயலாததில் சினங்கொள்வது ஏன்? செய்ய இயன்றதைச் செய்வோமாக. - ரொமெய்ன் ரோலண்டு 

    உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது.  கொடுத்த வேலையைத் திறம்படச் செய்து முடிப்பதே நமது கடன். - எபிக்டெட்டஸ்  

   
செய்ய வேண்டியத்தைச் செய்ய முயல்க; முயன்றால் செய்யவேண்டியது இது என்பதில் சந்தேகம் ஏற்படாது.  - ஆவ்பரி 

    கெட்ட காலம் வந்தால் எப்படிச் சகிப்பது என்பது குறித்து, நல்ல காலத்தில் சிந்தனை செய்வது மாந்தர் கடன். - டெரன்ஸ் 


    இன்று உன்னால் கூடியமட்டும் நன்றாய்ச் செய், நாளை அதனினும் நன்றாய்ச்  செய்யும் ஆற்றல் நீ பெறக் கூடும்.  - நியூட்டன் 


அறமே ஆற்றல் என்று நம்புவோமாக.  அந்த நம்பிக்கையுடன் நாம் அறிந்த கடமையை ஆற்றத் துணிவோமாக. - ஆப்ரகாம் லிங்கன் 

    உன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது?  அதைச் செய்ததையே பலனாய் அடைவாய்.  செயலே பலனாகும். செனீக்கா 

    சுயநலத்திலுள்ள நன்மை யாது?  மனிதர் கடமையைக் கடனாகவும், உரிமையை வரவாகவும் ஆக்கிவிட்டனர்;  வியாபாரம் என்றும் வியாபாரமே!

    கடனின்றி வாழ விரும்பினால் உரிமைகளைத் துறக்க வேண்டும்.  - பால் ரிச்சர்டு 

    ஒருபொழுதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்யமாட்டான்.  - ஆவ்பரி 

    ஒன்றும் செய்யாது காத்திருப்பவரும் ஊழியம் செய்பவரே . - மீல்டன்


    உனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் நன்றாக அனுஷ்டிக்க முயல்க. அங்ஙனம் செய்தால் நீ அறிய விரும்பும் மறை பொருள்களை எல்லாம் சரியான காலத்தில் தெரிந்து கொள்வாய்.  - செம்பிராண்ட் 

    தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது. - இப்ஸன் 

 
    

கருத்துரையிடுக

0 கருத்துகள்