மூடன் தன்னை அறிவாளி என்று மதித்துக் கொள்கிறான். ஆனால் அறிவாளியோ தன்னை முட்டாள் என்று அறிவான். - ஷேக்ஸ்பியர்
தேவர்கள் செல்ல அஞ்சும் இடத்திற்கு மூடர்கள் பாய்ந்து விடுவர். - போப்
முட்டாள்கள் தவறு செய்தால் அதனால் அவர்க்கு விளையும் தீமையினின்று அவர்களைக் காப்பாற்றி விட்டால், உலகத்தை முட்டாள்களால் நிரப்பியவர்களாவோம். - ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்
ஒவ்வொருவனும் பிழை செய்யக் கூடியவனே. ஆனால் மூடனைத் தவிர வேறு யாரும் பிழையை விடாமல் பிடித்துக்கொள்ளார். - லிஸரோ
உண்டென்றோ அல்லது இல்லையென்றோ பகுத்தறியாது பகர்வோரே மூடர்கள், அனைவரிலும் தாழ்ந்தவர். - தாந்தே
மூடன் பிறரைக் குறை கூறுவான்; அரைகுறை அறிவாளி தன்னைக் குறைகூறிக் கொள்வான். அறிவு முற்றியவன் தன்னையும் குறை கூறான், பிறரையும் குறை கூறான். - ஹெர்டர்
தங்கள் அபிப்பிராயத்தை ஒரு பொழுதும் மாற்றிக் கொள்ளாதவர் மூடரும் இறந்தவருமே. - லவல்
போக்கிரி என்பவன் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் முட்டாள். - கோல்ரிட்ஜ்
தவறு - அதில் எவ்வளவு உண்மையுளதோ அவ்வளவு அது அபாயகரமானதாகும். - அமீல்
தன் திருப்தியை நாடாது, உலகத்தின் மதிப்பை நாடி, தன் விருப்பத்திற்கு மாறாகப் பொருளும் புகழும் தேடச் சிரமம் எடுத்துக்கொள்பவன் என் அபிப்பிராயத்தில் முழு மூடன் ஆவான். - கதே
பிறர் நம்மை அறிந்துகொள்ள முடியாதபடி நடந்து கொள்வது நம் வழக்கம். அதன் முடிவு யாதெனில் நாமே நம்மை அறிந்து கொள்ள முடியாதபடி நடக்கப் பயின்று விடுகிறோம் என்பதே. - பிரெஞ்சுப் பழமொழி
மாந்தர் மூடராக வாழலாம். ஆனால் மூடராக இறக்க முடியாது. - யங்
0 கருத்துகள்