அறிவு

 'அறிவு' - ஆம், அது நாம் வானுலகு ஏறுதற்குரிய வன் சிறகு. - ஷேக்ஸ்பியர்

கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்! - எமர்சன்

எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும். - சாக்ரடீஸ்

சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான். - கார்லைல் 

நூலறிவு பேசும் - மெய்யறிவு கேட்கும். - ஹோம்ஸ் 

ஞானத்தின் முதல் வேலை தன்னை அறிதல்; அன்பின் முதல் வேலை தனக்குத் தான் போதுமானதாயிருத்தல். - ரஸ்கின் 

நுண்ணறிவு அன்புடன் சேர்ந்து விட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் அவனியில் கிடையாது. - கதே 

மனோ விகாரங்களே வாழ்வாகிய கப்பலைச் செலுத்தும் காற்று. அறிவே அதை நடத்தும் சுக்கான். காற்றின்றேல் கப்பல் நின்றுவிடும். சுக்கானின்றேல் தரை தட்டிவிடும். - ஷூல்ஜ் 

வாழ்வு யோசிப்பவனுக்கு இன்ப நாடகம், உணர்பவனுக்குத் துன்ப நாடகம். - வால்ப்போல்

 நீ எண்ணுவது எல்லோருக்கும் சொந்தம், நீ உணர்வதே உனக்குச் சொந்தம். - ஷில்லர் 

 மனிதனுடைய உடைமையாயிருக்கக கூடியது அறிவு ஒன்றே . ஆகையால் அறிவை விருத்தி செய்வதே ஆசைப்பட்டு அடைய முயலத்தக்க ஒரே வெற்றியாகும். - பழமொழி 

உண்மை ஞானம் கண் முன் இருப்பதைக் காண்பதன்று, பின் வருவதை முன் அறிவதாகும். டெரன்ஸ் 

 எதை நாம் அறியவில்லையோ அது நம்முடைய தன்று. - கதே 

ஒரு விஷயத்தைப் பல வாயிலாகப் பார்க்க முடியாத புத்தி குறுகியதாகும். -  ஜார்ஜ் எலியட் 

தான் தானாகவே இருக்க அறிவதே உலகில் பெரிய விஷயம். - மான்டெய்ன் 

அறிவின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை வெறுப்பது; அன்பின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை அனைவருக்குமாகச் செய்வது. - ரஸ்கின் 

உண்மை அறிவு அன்பில் கொண்டு சேர்க்கும். - வோர்ட்ஸ்வொர்த் 

உண்மையின் பெருங்கடல் நம்மால் அறியப்படாமல் பரந்து கிடக்கின்றது. நாமோ, கடற்கரையில் விளையாடி , அங்கும் இங்கும் ஓடி, அழகான ஒரு சிப்பியையும் மெல்லிய ஒரு கடற் பாசியையும் கண்டு மகிழ்ந்து நிற்கும் சிறு குழந்தைகளைப் போல் இருக்கிறோம் . - ஆவ்பரி 

சாஸ்திரிகளைப் போல் சாமர்த்தியமாய் அஞ்ஞானம் பேசுவதைவிட, சான்றோர்களைப் போல் சாமர்த்தியம் இன்றி ஞானம் பேசுதலே சாலச் சிறந்ததாகும். - செஸ்டர்டன் 

  கூடிய மட்டும் துன்பம் விளையாமல் தடுத்துக் கொள்வதும், தடுக்க முடியாத துன்பத்தைக் கூடிய மட்டும் பயன்படுத்திக் கொள்வதுமே அறிவு ஆகும். - ரஸ்கின் 

 என்னை நகைக்கச் செய்வன நம் அறியாமைகள் அல்ல . நம் அறிவுகளேயாகும். - மான்டெய்ன் 

 ஜீவனத்துக்கான சாதனமாக மட்டுமன்று,  ஜீவிதத்துக்கான சாதனமாகவும் மனிதனுக்கு அறிவு தேவை. - ஆவ்பரி 

நூலறிவு பெற்றவன் குளத்தை யொப்பான்; மெய்யறிவு உடையவன் சுனையை யொப்பான். - ஆல்ஜெர் 

 பகுத்தறிவு என்பது உண்மையை அறியக் கடவுள் நமக்குத் தந்துள்ள ஒரே புனிதமான சாதனம். நம் அனைவரையும் ஒன்றாய் இயக்கத்தக்கது அதுவே. ஆனால், ஐயோ, நாம் அதைத்தான் நம்புவதில்லையே! - டால்ஸ்டாய் 

நூலறிவு வந்துவிடும், மெய்ஞானம் வரத் தயங்குகின்றது. - டெனிலன் 

பிறர் வாசித்திருந்த அளவு நானும் வாசித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் அறிவில்லாதவனாயிருப்பேன். - ஹாப்ஸ் 

அறிவாளி தன்னை மட்டும் உடையவனாய் இருந்தால் போதும், அவன் ஒருபொழுதும் எதையும் இழப்பதில்லை. - மான்டெய்ன் 

தெரியாது என்று உணர்வது அறிவை அடைவதற்குப் பெரிய வழி. - டிஸ்ரேலி 

 கற்றதை எல்லாம் முழுதும் மறக்க முடிந்த பொழுதே நாம் உண்மையில் அறிய ஆரம்பிக்கிறோம். தோரோ 

 தன்னலமின்மையும் நாணமுமே மெய்ஞ்ஞானத்தின் இலட்சணம். - ரஸ்கின் 

 தன்னைப் பூரணமாய் அறியாதவன் ஒரு நாளும் பிறரைச் சரியாக அறிய முடியாது. - நோவாலிஸ் 

 பயபக்தி இல்லாத அறிவு அறிவாகாது. அது மூளை அபிவிருத்தியாய் இருக்கலாம் அல்லது கைத்தொழில் அறிவாய் இருக்கலாம் .  ஆனால் ஆன்ம அபிவிருத்தியாக மட்டும் இருக்காது. - கார்லைஸ் 

 அறிஞர் பகைவரிடம் இருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வர். - அரிஸ்டோபீனிஸ் 

 அறிவு பெற ஆற்றல் உடைய ஒருவன் அறிவிலியாய் இருப்பதைப் போன்ற துக்ககரமான விஷயம் வேறு எதுவும் இல்லை. - கார்லைல் 

 ஆறாதத மரத்தை வேலைக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது. அதுபோல்தான் பண்படாத அறிவையும். - ஹோம்ஸ் 

 அறிய முடியாததையும் அறிய முடியும்  என்று நம்புவதை ஒருநாளும் கைவிடற்க. இன்றேல் அதைத் தேடப் போவதில்லை. - கதே 

 நாம் அறிவதின் அளவு சுருங்குவதே நாம் அறிவில் முன்னேற்றம் அடைவதைக் காட்டும். இப்படிக் கூறுவது முரணாகத் தோன்றலாம் ,ஆனால் உண்மையே ஆகும். - ஹாமில்டன் 

 பக்தர் 'தன்'னைத் துறத்தல் போலவே அறிஞரும் 'தன்'னைத் துறத்தல் அவசியமானதே. - எமர்ஸன் 

 அறிவிலிகள் அறிவாளிகள் மூலம் பயன் பெறுவதைக் காட்டிலும் அறிவாளிகள் அறிவிலிகள் மூலம் அதிகமாகப் பயன்பெறுவர். - கேடோ 

முடியுமானால் பிறரை விட அறிவாளியாய் இரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே. - செஸ்டர்பீல்டு 

 வித்தையில் விருப்பம் உடையவன், தன்னை முழுவதும் அதற்குத்  தத்தம் செய்யவும், அதிலேயே தன் வெகுமதியைக் காணவும் திருப்தி உடையவனாய் இருக்க வேண்டும். - டிக்கன்ஸ் 

 பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்வாறு அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்க வேண்டும். - பிரெஞ்சுப் பழமொழி 

ஒரு பிராணி வாழ்வதைக் கண்டு நீ ஆனந்திக்கும் அளவே நீ அதை அறிய முடியும். வேறு வழியில் முடியாது. - ரஸ்கின் 

ஜலக் குமிழி தங்கக் கட்டிக்குச் சமானம் ஆகுமானால் உயர்ந்த மூளையும் உண்மையான உள்ளத்திற்குச் சமானமாகும். - ஹோம்ஸ் 

 நூலறிவு அதிகம் கற்று விட்டதாக அகத்தில் கர்வம் கொள்ளும். மெய்ஞ்ஞானம் இன்னும் அறிய வேண்டியது அதிகம் என்று தாழ்ச்சி சொல்லும். - கௌப்பர் 

 சாக்கடை நீரில் குப்பையைக் காண்பதா, அல்லது வானத்தைக் காண்பதா? உன் இஷ்டம் . - ரஸ்கின் 

மெய்ஞ்ஞானம் கடவுளிடம் அடக்கத்தையும், ஜீவர்களிடம் அன்பையும் , தன்னிடம் அறிவையும் உண்டாக்கும். - ரஸ்கின் 

அறிவுள்ள பிராணியாய் இருப்பதில் அதிக சௌகரியமே. அதைக்கொண்டு விரும்பியது எதற்கும் காரணம் சிருஷ்டித்து விடலாம் அல்லவா? - பிராங்க்லின் 

தன் உபயோகத்திற்கும் அவசியத்திற்கும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளாதவன் வேறு எவற்றை அறிந்திருந்தாலும் அறிவில்லாதவனே ஆவான். - டிலட்ஸன்

 யோசனை செய்யாதிருக்கக்கூடிய இடம் மரண சயனம் ஒன்றே. ஆனால் யோசனை செய்வதை அந்த இடத்திற்காக ஒருபொழுதும் விட்டு வைக்கக் கூடாது. - ரஸ்கின் 

 அறிவின் முன்னணியில் போர் புரிவோர்க்குப் பெரும்பான்மையோர் ஆதரவு ஒருநளும் கிடைப்பதில்லை. - இப்ஸன் 

ஒன்றும் அறியாதவன் தான் கற்றுக்கொண்டதைப் பிறர்க்குக் கற்றுக் கொடுப்பதாய் நம்பிக் கொள்கிறான். அதிகம் அறிந்தவன் தான் கூறுவது பிறர் அறிந்திருக்க முடியாது என்று நினைப்பது இல்லை. - லா புரூயர் 

குறைந்தபட்சத தீமையும், கூடிய பட்ச நன்மையும் விளையும் படி வாழ்வதே உலகில் தலைசிறந்த ஞானமாகும். - ரொமெய்ன் ரோலண்டு 

 குறுகிய புத்தியுள்ள மனிதர் குறுகிய கழுத்துள்ள பாட்டில்களை ஒப்பர் . அகத்தில் அற்பமாய் இருந்தால் புறத்தில் ஊற்றும் பொழுது அதிகச் சப்தம் செய்யும். - ஸ்விப்ட் 

 தீயவன் ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை. ஆம், ஒருநளும் மெய்யறிவு பெற்றதில்லை. இது முக்காலும் உண்மை. - போப் 

அறியாமை ஆண்டவன் சாபம், அறிவு தேவர் உலகத்திற்குக் கொண்டு செல்லும் சிறகு. - ஷேக்ஸ்பியர் 

' அறியாமை'யால் நமக்குச் சௌகரியங்கள்  கிடையாமல் போகும் என்பது மட்டுமன்று. நமது கேட்டிற்கு நம்மையே வேலை செய்யத் தூண்டுவதும் அதுவே . அது அறிவு 'இன்மை' என்பது மட்டும் அன்று. சதா காலமும் துன்பம் தந்து கொண்டிருக்கும் தவறுகளின் 'நிறை'வும் ஆகும். - சாமுவேல் பெய்லி 

 பார்க்க மாட்டோம் என்று சாதிக்கும் அளவுக்குக் குருடாய் உள்ளவர் உலகில் கிடையார். - ஸ்விப்ட் 

ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையாகில் அவன் வாழ்வு பாழே. - ஷாம்பர்ட் 

 கண் குருடு  என்று இரங்குவது போலவே அறிவு சூரியம் என்பதற்கும் இரங்க வேண்டும். - செஸ்டர்பீஸ்டு 

 மூளையின் முன் புறம் (அறிவு) பின்புறத்தை (உணர்ச்சியை) உறிஞ்சி உலர்த்திவிடுமானால் கேடே. அறிவினால் மட்டுமே நம்மை பெற்றுவிட முடியாது. விசாலமான நெற்றிக்கே எப்பொழுதும் இறுதியில் வெற்றி. ஆனால் வெற்றி கிடைப்பது தலையின் பின்புறம் மிகப்பருமனாய் உள்ள பொழுதே. - ஜே.ஆர்.லவல் 

அறிஞனுக்கு அனைத்துலகும் தாய்நாடே. சாந்நமான மனத்திற்கு எந்த இடமும் அரண்மனையே. - லில்லி 

அறிவிலி இடத்தையும் காலத்தையும் குறுக்க விரும்புகிறான். அறிஞனோ அவற்றை நீட்டவே விரும்புகிறான். - ரஸ்கின் 

 தனக்குத் தானே வழிகாட்டி என்னும் வண்ணம் போதுமான அறிவுடையார் யாருமிலர். - அக்கம்பிஸ் 

 வாழ்விடமிருந்தோ மக்களிடமிருந்தோ அதிகமாக எதிர்பாராது இருத்தலே மெய்யறிவின் ஜீவ அம்சமாகும். - மார்லி 

ஏறிக்கொள்ள அசுரனுடைய தோள்கள் கிடைக்குமானால் குள்ளன் அசுரனை விட அதிகத் தூரம் பார்க்க முடியும். - கோல்ரிட்ஜ் 

 ஷேக்ஸ்பியர் என்னை விட அதிக உயரம் உள்ளவரே. எனினும் நான் அவரை விட அதிகத் தூரம் பார்க்க முடியும். நான் அவருடைய தோள்களின் மேல் அல்லவா நிற்கின்றேன்! - பெர்னார்டு ஷா 



 ஒன்றுமே அறியாதவன் வாழ்பவன் ஆகமாட்டான். - கிரேஸியன் 

 அறிவை எதிர்ப்பவர் நெருப்பைக் கிளறுபவர் ஆவார். நெருப்புப் பொறி பறந்து எரிக்க வேண்டாதவற்றையும் எரித்து விடும். - கதே 

ஒருவனுடைய அறிவை அபகரித்து விட்டால் அவனைச் சிசு நிலைமையில் வைப்பதாகாது. விலங்கு நிலைமையில் - அதுவும் விலங்குகளில் எல்லாம் அதிகத் துஷ்டத்தனமான விலங்கின் நிலைமையில் வைப்பதேயாகும். - அர்னால்டு 

அற்ப அறிவு அபாயகரம் என்றால், அபாயம் நேராத அளவு அதிக அறிவு அடைந்துள்ளவன் எவன்? - ஹக்ஸ்லி




கருத்துரையிடுக

0 கருத்துகள்