வழிபாடு


     கடவுளை நோக்கி நிற்கும் ஆசையே பிரார்த்தனையின் தெளிவான லட்சியம் ஆகும். - பிலிப்ஸ் புரூக்ஸ் 

     கடவுளிடம், இது 'வேண்டும்' என்று குறிப்பிடாமல் பொதுவாகப் பிரார்த்திப்பதே முறை. நமக்கு நன்மை எது என்பதைக் கடவுள் நன்கு அறிவார். - ஸாக்ரடீஸ்.   

     மனிதனுடைய இதயம் ஊமையாய் இருந்தாலன்றி கடவுள் ஒரு நாளும் செவிடாய் இருப்பதில்லை. - குவார்ல்ஸ்

     கடவுளிடம் மக்கள் பிரார்த்திப்பது எல்லாம் இரண்டும் இரண்டும் நான்கு ஆகாமல் இருக்க வேண்டும் என்பதே. - ருஷ்ய பழமொழி

     நாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ  அதையே கடவுள் நம்மிடம் வேண்டுகிறார். - ஜெரிமி டெய்லர்.

     நமக்குத் தேவையான எல்லாம் கடவுளிடம் வேண்டாம். ஆனால் வேண்டுவதற்கு எல்லாம் நாம் கவனமாய் உழைத்தல் அவசியம். - ஜெரிமி டெய்லர்

     ' கடவுளே! தைரியம் அருளும்' என்று பிரார்த்தித்தால்,  துன்பத் தீயில் தள்ளுவதே அவர் அருளும் வழி. - ஸெஸி

     என் பிரார்த்தனைகளுக்கு எல்லாம் கடவுள் அருளவில்லை என்பதற்காக அவருக்கு வந்தனம் அளிக்குமாறு வாழ்ந்துவிட்டேன். - ஜுன் இன்ஜெலோ

     அறியாமலே என் எண்ணங்களில் சில கடவுள் பிரார்த்தனையாக இருப்பதுண்டு. - விக்டர் ஹகோ

     ஒவ்வொரு புனிதமான ஆசையும் கடவுள் பிரார்த்தனையே ஆகும். - ஹுக்கர்

     சுவர்க்கம்தான் கேட்காமலே கிடைக்கும்; கடவுளோ கேட்டால்தான் கிட்டுவர். - லவல்

     கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய  மூன்று வரங்கள்: முதலாவதாக நல்ல மனச்சான்று, இரண்டாவதாக மன ஆரோக்கியம், மூன்றாவதாகத் தேக ஆரோக்கியம். ஸெனிகா

     பிரார்த்தித்தால் கேட்டதைப் பெறுவோம், அல்லது கேட்டிருக்க வேண்டியதைப் பெறுவோம். - லெய்ட்டன்



     





 

கருத்துரையிடுக

0 கருத்துகள்