அப்பாக்கள் செய்யும்
இரண்டாம் தவறு இது.
இரண்டாம் தவறு இது.
மென்மையை நீங்கள்
கற்பிக்கிறீர்கள். பெண்களின்
செருப்பைக்கூட
வடிவமைக்கிறீர்கள். பதினாறு
வயதுக்கு மேலும் பலூன் வாங்கி
வருகிறீர்கள்.
சில்லென்று முளைக்கும்
சிறகுகளைக்கூட வேண்டாத
ரோமங்களென்று வெட்டி
விடுகிறீர்கள்.
அதனால்தான் காற்று
கடுமையாக அடித்தாலே பல
பெண்களுக்கு ரத்தம்
கசிந்துவிடுகிறது.
கற்பிக்கிறீர்கள். பெண்களின்
செருப்பைக்கூட
வடிவமைக்கிறீர்கள். பதினாறு
வயதுக்கு மேலும் பலூன் வாங்கி
வருகிறீர்கள்.
சில்லென்று முளைக்கும்
சிறகுகளைக்கூட வேண்டாத
ரோமங்களென்று வெட்டி
விடுகிறீர்கள்.
அதனால்தான் காற்று
கடுமையாக அடித்தாலே பல
பெண்களுக்கு ரத்தம்
கசிந்துவிடுகிறது.
ஒன்று சொல்கிறேன்
உங்களுக்கு. என் உயிரின்
கடைசிச்சொட்டுவரை
அவள்தான் நிறைந்திருக்கிறாள்.
என்
நீண்ட பயணத்திற்குத் தகுதியாக
அவளைத்
தயாரிக்க வேண்டும்.
அவள் உங்களுக்குத் தகுதி
இல்லாதவளா?
அப்படியில்லை
அன்பில்-குணத்தில்-
காதலில் அவள் என்னிலும்
மிக்கவள். ஆனால், என்
வாழ்க்கைக்குத் தயாராய்
அவள் இன்னும்
வார்க்கப்படவில்லை.
என்னுடையது புயல்யாத்திரை.
அவள் பூஜையறைக்
குத்துவிளக்கு. அணைந்து
போகாமலிருப்பது எப்படி
என்பதைச் சுடருக்குச்
சொல்லிக்
கொடுக்கவேண்டும்.
...........
நம் வாழ்க்கை முறை உடம்பை
வாழையாய் வளர்த்துவிட்டது.
மெல்லியதோலில்
மனதைக் கோழையாய்
வளர்த்துவிட்டது. உடம்புக்கும்
மனதுக்கும் ஒருமைப்பாடு
இல்லை.
செருப்புக் கடித்துச்
செத்துப்போகும்
தேகங்களை
வளர்த்துவிட்டோம்.
தந்திவந்தால் இறந்துபோகும்
இதயங்களை
வளர்த்துவிட்டோம்.
தேகம் வன்மை செய்து இதயம்
செம்மை செய்யும் பயிற்சிகள்
இல்லை.
இனிவரும் நூற்றாண்டுகளில்
மழை
நிறைய இருக்குமோ
இல்லையோ-
இடி நிறைய இருக்கும்.
கற்பக விதைகள் வாங்கி
காளான் சாகுபடி செய்யும்
இந்தக் கல்விமுறையும்-
ஈசல் பண்ணைகளாகிவிட்ட பல்கலைக்
கழகங்களும் மாணவர்களுக்கு தந்தனுப்புவது
அடுத்த நூற்றாண்டு ஆயுதம் அல்ல
கடந்த நூற்றாண்டு கவண்வில்.
உங்கள் பெண்ணும் விதிவிலக்கல்ல அவள்
ஈசல் உடம்புக்காரி காளான் மனசுக்காரி
என்னிடம் விட்டுவிடுங்கள் எனக்கு
அவளை இணை செய்து கொள்கிறேன்.
--------------
அன்புள்ள தமிழ்ரோஜா .
இதுவரை உனக்கு நான் எந்தக்
கடிதமும் எழுதியதில்லை.
கடிதம் என்பது தூரங்களின்
காகித வடிவம் .
உனக்கும் எனக்கும்
தூரமில்லை.
உன் காதுகள் என்
உதடுதொடும்
தூரத்திலேயே இருந்ததால்
காகிதத்தில் பேசும் அந்நியம்
நேர்ந்ததில்லை.
இன்னொன்று.
காதல் கடிதங்கள் உணர்ச்சியின்
மத்தாப்புகளாய் இருப்பதுண்டே
தவிர உண்மையின் தீபங்களாய்
இருப்பதில்லை.
ஒரு காதல் கடிதம்
படிக்கப்படும்போதே
எண்பது சதவிகிதம் கழிக்கப்பட
வேண்டும் . மிச்சமிருக்கும்
இருபது சதவிகிதத்தில்
உணர்ச்சியின் வண்டலின்கீழே
உண்மையும் கொஞ்சம்
உறைந்திருக்கும்.
உலகத்தின் காதல்
கடித்தங்களெல்லாம்
அழகானவை. ஆனால்
ஆரவாரமானவை.
நிலாவில் ரத்தம் கசிவதுபோல்
மீசையோடு பிறந்த
குழந்தைபோல்-
கவனம் ஈர்ப்பவை.
ஆனால் எதார்த்தம் மீறியவை.
எனவே இடைவெளி
இருந்திருந்தாலும் உனக்கு நான்
எழுதியிருக்கமாட்டேன்.
பள்ளம் நிரப்ப
நுரை கொட்டியிருக்கமாட்டேன்.
ஆனால், இப்பொழுது
எழுதுகிறேன்.
ஏனென்றால் இது காதல்
கடிதமல்ல.
என் தன்னிலைவிளக்கம்.
உன்னைக் காதலிக்கத்
தொடங்கிய பிறகு
ஒருநாளில் எத்தனை
மணிநேரம் நான்
முட்டாளாயிருக்கிறேன்
என்பதன் மொத்தத்
தொகுப்பு.
நான் உன்னை
நேசிக்கவில்லையோ என்று உன்
உணர்வுகள் உறங்கும்போது நீ
உச்சரித்தாய்.
என் காதலின் எடை என்ன
என்பதை
மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிட முடியாது.
கத்தியால் கைகீறி ரத்தம்
காட்டவும் மாட்டேன்.
நேசம்காட்ட அனுமன் போல்
நெஞ்சுகிழிக்கவும் மாட்டேன்.
பின்-
அடையாளம் எதுவென்பாய்.
என் வானத்தில் சூரியன்
அஸ்தமிக்கவில்லையே.
அதுதான் அடையாளம்.
எந்தப் புதுப்பேனா
வாங்கினாலும்
என் பெயர் எழுதிப்பார்ப்பதை
மறந்து அனிச்சை செயலாய்
உன் பெயர்
எழுதிப்பார்க்கிறேனே
அதுதான் அடையாளம்.
கவிதைகள் அடையாளம்.
என் கண்ணீர் அடையாளம்.
ஒருநாள் என் அறையில் நீ
தவறவிட்ட
உன் பூப்போட்ட கைக்குட்டை
என் பூஜைப்பொருள்.
என் வீட்டுக்கண்ணாடியில்
உன்படத்தை ஓரத்தில் ஒட்டி,
உன் படத்தின் பக்கத்தில்
என் பிம்பம் படியவைத்து
ஜோடிப் பொருத்தம் கண்டு
சுகம் காண்பதில் என்
சிநேகமான காலைப்பொழுது
செலவாகிறதென்று தெரியுமா
உனக்கு?
நினைவுக் கொசுக்களால்
நித்திரை தொலைந்த
ஒரு நீல ராத்திரியில்
கால்கடுக்க நடந்து,
கடற்கரை அடைந்து, நீயும்
நானும் சந்தித்த இடத்தில்
அனாதைக் குழந்தைகளாய்
அழுது கொண்டிருந்த
உன் மல்லிகை உதிர்வுகளை
மடியோடு அள்ளிவைத்து
மார்போடு
தழுவிக்கொண்டு விடியவிடிய
விழித்துக் கிடந்தேனே.
அந்த நேச உஷ்ணத்தின்
நிறமறிவாயா நீ?
என் பத்திரிகை அலுவலகத்தின்
எக்ஸரே கண்ணாளர்கள்
உன்னையும் என்னையும்
ஊடறுத்துப் பார்த்து,
தமிழ்நாட்டிலேயே
தமிழ்ப்பற்று அதிகமுள்ளவன்
கலைவண்ணன் மட்டும்தான் என்று
கிண்டல்மொழி சுண்டுவதைக்
கண்டதுண்டா நீ?
பூமியின் அடிவயிற்றில்
கனன்று கொண்டிருக்கும்
அக்கினி மாதிரி என் அடிமனத்தில்
கனன்று கொண்டிருக்கும்
ஆசை அக்கினி
உன்னைச் சுடவில்லையா?
என் நேசம் புரியும் முன்பு நீ
என் நெஞ்சு புரியவேண்டும்.
உன்னை உன் வாழ்க்கைக்குத்
தயாரிக்கிறேன்.
தண்ணீர் பயம் கொண்டு
தள்ளி நின்றால்
நாளை எப்படி வெந்நீராற்றில்
விசைப்படகு விடுவாய்?
நீ சுத்தத் தங்கம் தான்.
நல்ல தங்கத்தில் நகைசெய்ய
முடியாது.
சிறிதே கலக்க வேண்டும்
செம்பு.
தைரியச் செம்பு
அனுபவச் செம்பு
அதைத்தான் உன்னில் கலக்க
நினைக்கிறேன்.
உன் கங்காரு மடியைவிட்டு
வெளியே வா.
நான் சிங்கத்தின் முதுகு.....
ஏறிக்கொள் .
முதலில் - தார்ச்சூடு
காணட்டும் உன்
தாமரைப் பாதம்.
உன் வெல்வெட் திரைவிட்டு
வெளியே வா.
குளிரில் கோணிப்போர்த்துக்
கூவம்கரைக் குடிசை ஒன்றில்
இரவுகழி.
உன் சைவக்கோடு கட.
கூறுகட்டி மீன்விற்கும் குப்பத்துக்
கிழவியைச்
சற்றே நகரச் சொல்லிவிட்டு
ஒரு வெயில்பகலில் மீன்
விற்றுப்பார்.
அரசாங்க லாரியில்
தண்ணீர் பிடி
இரண்டு குடம் வேர்வைக்குப்
பிறகு
ஒரு குடம் தண்ணீர் நிறைவதை
உணர்.
வெள்ளிக் கரண்டியோடு
பிறந்தவளுக்கு ஏன்
வேலையற்ற வேலை என்பாய்.
ஓர் ஆணியைச் சுயமாய்
அடிக்கத்
தெரியாதவளுக்கு
வெள்ளிக்கரண்டி
சொந்தமாய் இருக்கக்கூடாது.
அனுபவங்கள் தடுப்பூசிகள்.
போட்டுக்கொள்.
அம்மை குத்தவந்தால்
கைமறைக்கும்
குழந்தை போல்
அடம்பிடிக்காதே.
அனுபவங்களுக்கு உடம்பு, மனம்
இரண்டையும் உட்படுத்து.
தன்னைத் திருப்பிப் போடுவதன்
மூலம்தான் பூமி சூரியனிடம்
அனுபவம் பெறுகிறது.
வசந்தம் - கோடை - மழை - குளிர்
வெயில் - புயல் என்ற
அனுபவங்கள்
இல்லையேல் எப்போதோ பூமி
இறந்து போயிருக்கும்.
கல்யாணச் சந்தையில் உன்னைத்
துலக்கி வைப்பதற்கு மட்டுமல்ல
கல்வி.
அனுபவங்களின் பால்
ஆற்றுப்படுத்துவது கல்வி.
நமக்குள் ஆண்-பெண் என்ற
பேதம்
நம் அவசரத்தேவைக்காக
மட்டும் இருக்கட்டும்.
மற்றபடி பிறப்புமுதல்
இறப்புவரை
உணர்ச்சியும் வலியும்
ஒன்றுதான்.
ஆண் உடம்பில்
ரத்தம் - 51/2 லிட்டர்
பெண் உடம்பில் -
5 லிட்டர் என்ற
பேதமிருந்தாலும் செல்களின்
செயல்கள் ஒன்றுதான்.
எனவே ஆணுக்குத்தான் அதிக
உரிமை. பெண்ணுக்கில்லை என்ற
பிற்போக்குத் தனத்திலிருந்து
பிதுங்கி வெளியே வா.
ஏ பணக்கார நத்தையே
முதலில் நீ உன் தங்கக்கூடு
தகர்.
இந்தப் பிரபஞ்சமே
பொதுவென்று கொள்ளாமல்
மனிதர்கள் மனைப்பட்டா
வாங்கும் போராட்டத்திலேயே
மரித்துப் போகிறார்கள்.
பயன்படுத்தாத வானம் -
பயன்படுத்தாத சூரியன் -
பயன்படுத்தாத நட்சத்திரம் -
பயன்படுத்தாத பூமி -
பயன்படுத்தாத மூளை
மனித குலத்துக்குப்
பாக்கியிருக்கிறது .
ஒவ்வொரு மனிதனும் தனது
சொந்த
மூலையைக் கூட அடுத்தவன்
மனைவி மாதிரி
பாவிப்பதற்குப்
பயப்படுகிறான்.
இரண்டு சதவிகிதத்துக்கு மேல்
மூளை இங்கே
வேலை வாங்கப்படவில்லை.
தொண்ணூற்றெட்டு சதவிகித
மூளை சாகும்வரை
செல்வியாகவே இருக்கிறது.
நான் என் புலன்கள் திறந்து
பிரபஞ்ச எல்லைவரை பறக்கப்
பிரியப்படுகிறேன்.
நீ மழையில் நனைந்த
கிளிக்குஞ்சாய்
மறுகிநின்றால் எப்படி?
சிறகு விரித்து வா.
சிலிர்த்து வா.
உனக்கு நானோ எனக்கு
நீயோ
சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம் வா.
உனக்கு நான் துன்பம்
செய்திருந்தால்
என்னை நீ மன்னித்துவிடு.
நான் உனக்கு நறுக்க நினைத்ததென்னவோ
நகம்தான். ஆனால், விரல் காயமாகிவிட்டது.
எப்போதும் படுத்தே கிடைக்காதே.
தலையணையொன்றும் மார்க்கண்டேயனின்
சிவலிங்கம் அல்ல.
நம்பிக்கையின் சக்தியை உடலெங்கும் பரப்பு
உன்னை உணர், என்னை நினை.
என்னை மன்னித்துவிட்டாய் என்பதன்
அடையாளமாய் என் குயிலே
தொலைபேசியில் கூவு.
ஆலய மணிகளையும் மாதாகோயில்
மணிகளையும் விட தொலைபேசி
மணியில்தான் நம் காதல் பூஜிக்கப்படுகிறது.
எப்போது கேட்கும் உன் தொலைபேசிச்
சங்கீதம்?
காதலோடு .....
கலைவண்ணன்
ஒரு தாய் தன் குழந்தையை உறங்கவைப்பது
போல் கடிதத்தின் இமை மூடினான். காகிதப்
பறவை சிறக்கடித்தது.
...........................
வாழ்வின் மர்மம்தான்
வாழ்வின் ருசி.
நாளை நேர்வதறியாத சூட்சுமம்தான்
அதன் சுவை.
எதிர்பாராத வெற்றிதான்
மனித மகிழ்ச்சி .
தோல்வியும் எதிர்பாராமல் வருவதால்தான்
மனிதன் அதன் முன்நிமிஷம் வரைக்கும்
முயற்சியில் இருக்கிறான்.
மரணத் தேதி மட்டும் மனிதனுக்குத்
தெரிந்துவிட்டால் மரணம் வருமுன்பே அவன்
மரித்துப் போவான்.
0 கருத்துகள்