முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேற்கோள் (அப்துல்கலாம்)

 கிளி வளர்த்தேன் 
பறந்து விட்டது.
அணில் வளர்த்தேன்
ஓடிவிட்டது.
மரம் வளர்த்தேன் 
இரண்டும் திரும்பி வந்துவிட்டது.
...........

அக்கினிச் சிறகுகள் அணைவதில்லை அவை
இறவாது வாழும் அவற்றிலிருந்து
விழுந்த இறகுகள் 
மேலெழுந்து பறந்து கொண்டிருக்கும் வரை....
......!..

அழகைப் பற்றி கனவு
காணாதீர்கள், அது உங்கள் 
கடமையைப் பாழாக்கிவிடும்.
கடமையைப் பற்றி கனவு
காணுங்கள் அது உங்கள்
வாழ்க்கையை அழகாக்கும்.
................
கனவு காணுங்கள்
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில் 
காண்பது அல்ல
உன்னைத் 
தூங்க விடாமல் 
பண்ணுவது எதுவோ
அதுவே (இலட்சிய) கனவு.
........

பிறந்தநாள்

உன் வாழ்நாளில்
நீ அழுது 
உன் அன்னை சிரித்த
ஒரே நாள்.....
..........

நாம் 
கனவு காண வேண்டியது
மகத்தான இந்தியாவை அல்ல.
மாறாக
எழுத்தறிவு பெற்ற
இந்தியாவைத்தான்.
..........

ஒரு முறை வந்தால்
அது கனவு
இருமுறை வந்தால்
அது ஆசை
பலமுறை வந்தால் 
அது லட்சியம்.
........
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னைக் கொன்றுவிடும் 
கண்ணைத் திறந்து பார்.
நீ அதை வென்று விடலாம்.
...........
நம் அனைவருக்கும் 
ஒரே மாதிரி திறமை 
இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்
அனைவருக்கும்
திறமையை
வளர்த்துக்கொள்ள ஒரே 
மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
.........
தோல்வி மனப்பான்மையை 
தோல்வி அடையச் செய்வோம்!
கனவு காணுங்கள்
கனவு என்பது தூங்கும்போது
வருவதல்ல!
நம்மை தூங்க விடாமல் செய்வதே 
கனவு!
..........

ஒரு நல்லப் புத்தகம்
நூறு நல்ல
நண்பர்களுக்கு சமம்.
ஆனால், ஒரு நல்ல
நண்பன் ஒரு
நூலகத்திற்கே சமம்.
.........

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை
தேவை இல்லை.  துன்பங்களை சந்திக்கத்
தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை...
...........

உன் கை ரேகையைப் பார்த்து எதிர் காலத்தை
நிர்ணயித்து விடாதே.... ஏனென்றால் கையே 
இல்லாதவனுக்கும் கூட எதிர்காலம் உண்டு.
.............

கனவு காணுங்கள்.  அவற்றை 
நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
என்னால் முடியும்....
நம்மால் முடியும்....
இந்தியாவில் முடியும் என்ற
மந்திரத்தை சொல்லிக் 
கொண்டே இருங்கள்.
...............

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் 
பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது .  ஆனால்
அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது
உங்கள் கைகளில் தான் உள்ளது.
...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால் 
உனது கால்களை இழுத்து
இழுத்து நடக்காதே!



..........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...