தன்னைக் காண்பதுவே மிகக் கடினமான காரியம். பிறர் செயல்களில் குற்றம் காண்பதுவே மிக எளிதான காரியம். - தேல்ஸ் தீயோர் தம் குற்றங்களைத் தாமே மன்னித்து விடுவர்; நல்லோர் இனிமேல் அத்தகைய குற்றங்கள் செய்யாதிருப்பர்; முதற் குற்றத்தைச் சரியென்று சாதிப்பவன் மூன்றாவது குற்றம் செய்தவனாகின்றான். - பென…
Read more »உயர்ந்ததினிடம் உண்டாகும் பக்தியிலும் உயர்ந்த உணர்ச்சி கிடையாது. - கார்லைல் வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம். - கோல்ரிட்ஜ் மக்கள் அனைவரும் பக்தர்களே. சிலர் புகழையும் பலர் பெரும்பாலோர் சுகத்தையும் வணங்குவர். - கிரீஷியன் அன்பும் நம்பிக்கையும் உடையவரே ஆண்டவனை வணங்குபவர். - அகஸ்…
Read more »கருணையானது பிழியப்படுவதன்று. மழைபோல் பொழிவதாகும். அது அளிப்போனையும் பெறுவோனையும் ஆசிர்வதிக்கும். அதுவே ஆற்றல்களில் தலைசிறந்த ஆற்றல். அதுவே கடவுளின் இலட்சணம். நீதியின் கடுமையைத் தணிக்கும் கருணையுடன் கூடிய மனித சக்தியே கடவுள் சக்தியை ஒக்கும். -ஷேக்ஸ்பியர் கருணை காட்டுபவன் எப்போதும் வெற…
Read more »பிறர்க்கு இன்பம் அளிப்போரே பாக்கியவான்கள். பிறரிடம் சச்சரவை நீக்கி சாந்தியை விளைவிப்போரே பாக்கியவான்கள். - பீச்சர் இவர் அனைத்தையும் தியாகம் செய்தார்; அவ்வளவு அதிகமாக அதைச் செய்தார்; அதிகமாக மன்னிக்கவும் இரங்கவும் செய்தார்.யாரையும் துவேசித்ததில்லை. - மாஜினி கல்லறைமீது சால்பின் சாரம…
Read more »உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருபொழுதும் தனித்தவராகார். - ஸ்ர்பிலிப் கொள்கை உறுதியாயிருப்பின் தனிமையாயிருப்பது தனிமையாகாது . - அனர்பாஷ் தன்னந் தனியாய் நிற்பவனைவிட அதிகச் சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது. - இப்சன் உயர்ந்த எண்ணங்களின் தோழமை உடையோர் ஒருநாளும் தனிமை காண்பதில…
Read more »இந்த உலகில் மூன்று விதத் துறவுகள் :- அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு; அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு; பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு. இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே . - ரஸ்கின் எனக்குத் துறவறத்தில் நம்பிக்கை இல்லை. ரோஜாச்செடிய…
Read more »கடமையைச் செய்துவிட்டேன்; அதற்காகக் கடவுளைத் துதிக்கிறேன். - செல்ஸன் உன் கடமையைச் செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்துகொள்வாய். - கதே கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிகாட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை. - அனடோல…
Read more »மூட நம்பிக்கை மனித அமைப்பிலேயே ஓர் அம்சம். அதை ஓட்டிவிட்டோம் என்று மனோராஜ்யம் செய்யும் பொழுது அது நம் மனத்தில் ஒரு மூலையில் பதுங்கியிருக்கும். தனக்கு அபாயம் வராது என்ற நிலைமையில் திடீரென்று வெளியேறும். - கதே மூட நம்பிக்கை பயந்து பதுங்கும்; அதனிடம் அதர்ம நினைவே அதிகம்; கடவுளி…
Read more »மூடன் தன்னை அறிவாளி என்று மதித்துக் கொள்கிறான். ஆனால் அறிவாளியோ தன்னை முட்டாள் என்று அறிவான். - ஷேக்ஸ்பியர் தேவர்கள் செல்ல அஞ்சும் இடத்திற்கு மூடர்கள் பாய்ந்து விடுவர். - போப் முட்டாள்கள் தவறு செய்தால் அதனால் அவர்க்கு விளையும் தீமையினின்று அவர்களைக் காப்பாற்றி விட்டால்,…
Read more »'அறிவு' - ஆம், அது நாம் வானுலகு ஏறுதற்குரிய வன் சிறகு. - ஷேக்ஸ்பியர் கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்! - எமர்சன் எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும். - சாக்ரடீஸ் சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு…
Read more »நன்மை என்றும் தீமை என்றும் இல்லை; அவ்விதம் ஆக்குவது மனமே. - ஷேக்ஸ்பியர் 'நன்மை, தீமை' - நம் அறியாமையால் எழும் இரு பெயர்கள். நம் மனத்திற்கு உகந்ததை நன்மை என்கிறோம், பிறர் மனத்திற்கு உகந்ததைத் தீமை என்கிறோம். ' தீமை' - நமக்குத் தீங்கு இழைப்பது. 'நன்மை' அநேகமாய்ப் …
Read more »இலட்சியம் இல்லாத மனிதன் திசையறி கருவி இல்லாத கப்பலை ஒப்பான். - ஆவ்பரி மேல் நோக்காதவன் கீழேயே நோக்குவான். உயரப் பறக்கத் துணியாத ஆன்மா ஒருவேளை தரையில் புரளவே விதிக்கப்பட்டிருக்கும் . - பீக்கன்ஸ் பீல்டு தாழ்ந்த இலட்சியத்தில் ஜெயம் பெறுவதைவிட உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுறு…
Read more »உடல் - அது மண்ணேயன்றி வேறென்று. ஆன்மா - அது நித்தியத்தின் முகை ஆகும். -கல்வெர்வெல் மனிதனையும் அவன் செயல்களையும் அடக்கி ஆள்வது ஜட சக்தி அன்று, ஆன்மா சக்தியேயாகும். - கார்லைல் ஆன்மாவின் கதவை ஒரு விருந்தாளிக்கு ஒரு முறை திறந்துவிட்டால், பின் யாரெல்லாம் உள்ளே வந்து புகுவர்…
Read more »தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஆச்சரியத்தில் முடிவடையும். முதல் ஆச்சரியம் அறியாமையின் குழந்தை; மற்ற ஆச்சரியம் வணக்கத்தின் தாய். மன்னது நமது அறிவின் பிரசவக் கஷ்டம் இறுதியானது அதன் சுக மரணம். - கோல்ரிட்ஜ் நுண்ணிய கருத்துக்கள் உடைமை மட்டுமே தத்துவ ஞானம் ஆகிவிடா…
Read more »நூறு விதமாய்க் கூறினாலும் மதம் ஒன்றுதான் உண்டு. - பெர்னார்ட்ஷா உலகமே என் தேசம், நன்மை செய்வதே என் சமயம். - தாமஸ் பெய்ன் மனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை. 'மரணத்திற்குப்பின் யாதோ?' என்னும் பயமே மதம். - ஜார்ஜ் எலியட் அவனியில் உள்ள சமயங்களில் அறத்த…
Read more »நரகத்திற்குச் செல்ல மனிதர் எவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்கின்றனர். அதில் நேர் பாதி போதுமே சுவர்க்கத்திற்குச் செல்ல - அதை நல்வழியில் எடுத்துக் கொள்ளும் துணிவு மட்டுமே தேவை. பென் ஜான்ஸன் நரகம் என்பது வேறெங்குமில்லை. நன்றாய் ஆராய்ந்தால், அது பாவமேயாகும். கடவுளினின்று பிரிந்திருப…
Read more »அன்பும் அறமும் எவ்வளவோ சுவர்க்கமும் அவ்வளவே. - பார்க்கர் சுவர்க்கத்தின் ஆசை ஒருவனைச் சுவர்க்க மயமாய் ஆக்கிவிடும். - ஷேக்ஸ்பியர் அறம் விரும்பு; அதுவே வீடு. - மில்டன் மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழு…
Read more »கடவுளை நோக்கி நிற்கும் ஆசையே பிரார்த்தனையின் தெளிவான லட்சியம் ஆகும். - பிலிப்ஸ் புரூக்ஸ் கடவுளிடம், இது 'வேண்டும்' என்று குறிப்பிடாமல் பொதுவாகப் பிரார்த்திப்பதே முறை. நமக்கு நன்மை எது என்பதைக் கடவுள் நன்கு அறிவார். - ஸாக்ரடீஸ். மனிதனுடைய இதயம் ஊமையாய் இருந்தாலன்…
Read more »