முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரார்த்தனை

 ஆங்கிருந்த கோயில் அர்ச்சகரின் மனைவி அவரை நோக்கி, 'ஐய ' பிரார்த்தனையைப் பற்றிச் சற்று விளக்குங்கள்' என்றார் .

அவர் சொல்லத் தொடங்கினார்.

    நீங்கள் உங்கள் துயரத்திலும் தேவையிலும் பிரார்த்தனை செய்கின்றீர்கள்.  உங்கள் மகிழ்ச்சியின் முழுமையிலும் வாழ் நாள்களின் நிறைவிலும் கூட நீங்கள் பிரார்த்திக்க வேண்டுமன்றோ ?

    ஏனெனில், நிலைத்து வாழ்கின்ற பரவெளியில் உங்கள் உள்ளம் கலக்க வியாபித்தலே பிரார்த்தனை என்பதல்லாமல் வேறென்ன?

    உங்களுடைய இருளை மட்டும் பரவெளியிலே சொரிந்து விடுவது உங்களுக்குச் சாந்தியைத் தருமானால், உங்கள் இதயத்தின் வைகறையைக் கூட அந்தப் பரவெளியிலே பெய்து விடுவதும் உங்கள் மகிழ்ச்சிக்காகவே பிரார்த்தனைக்காக, உங்கள் ஆத்மா உங்களை அழைக்கும் போது , நீங்கள் அழுவதைத் தவிர்த்து வேறொன்றும் உங்களால் செய்ய முடியாதாயின், நீங்கள் அழ அழ அந்த ஆத்மா, உங்களை நீங்கள் வாய்விட்டுச் சிரிக்கும் வரை, உங்களை மேலும் மேலும் கிசுகிசுத்துத் தூண்டிவிடும்.

    நீங்கள் தியானிக்கும் அந்த நேரத்திலே தியானிக்கும் காலம் தவிர, பிற நேரங்களில் உங்களால் சந்திக்க இயலாதவர்களான பிரார்த்தனை செய்யும் பல்லோரையும், பரவெளியிலே சந்திக்க நீங்கள் மேன்மேல் உயர்கின்றீர்கள்.

    எனவே, கண்ணுக்குப் புலப்படாத அந்தப் பெரிய கோயிலுக்கு நீங்கள் செல்வது. பெருமகிழ்ச்சிக்கும், இனிய ஒருமைப்பாட்டு உணர்வுக்கும் அன்றி, மற்றொன்றுக்கு அன்று என இருக்கட்டும்.

    ஆனால், அப் பெரிய கோயிலுக்கு நீங்கள் செல்வது வரம் கேட்டு இருப்பதற்காக அன்றி வேறெதற்கும் அன்று எனில் நீங்கள் எதையும் அங்குப் பெற முடியாது.

    அதனுள் நீங்கள் நுழைவது உங்களைத் தாழ்மைப்படுத்திக் கொள்ளவே எனில், நீங்கள் மேலுயர்த்தப்பட மாட்டீர்கள்.

    மற்றவர்களின் நன்மைக்காக வேனும் நீங்கள் வரம் கேட்டு இரப்பதற்கு அங்குச் செல்வீர்களாயின், உங்கள் பிரார்த்தனை கேட்கப்பட மாட்டாது.

பிறரால் காணப்படாமல் அக் கோயிலுக்குள் நீங்கள் நுழைவதே நல்லது.

வார்த்தைகளால் நீங்கள் எப்படிப் பிரார்த்தனை செய்வது என்று நான் கூற முடியாது.

    உங்கள் உதடுகள் மூலமாக இறைவனே, வார்த்தைகளை முணு முணுக்க வைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் இறைவன் உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்பதில்லை.



    கடல், காடு, மலை இவற்றின் பிரார்த்தனைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தர இயலாது.

    மலை, காடு, கடல் இவற்றிடையே பிறந்த நீங்கள் உங்கள் இதயத்திலே அவற்றின் பிரார்த்தனையைக் காண இயலும்.

    நீங்கள் இரவின் அமைதியிலே கூர்ந்து கவனிப்பீர்களானால், அவை மௌனத்தோடு இவ்வண்ணம் கூறுவதைக் கேட்பீர்கள்.

 'எங்கள் இறைவனே, எமது சிறகுள்ள ஆத்மாவே, எங்களுள் எழும் உணர்வு உமது உணர்வே.

    எங்களுள் எழும் விருப்பங்கள் உமது விருப்பமே.

    'உம்முடைய தாய் எங்கள் இரவுகளை, உம்முடையதான பகலாக மாற்றுவதும் எங்களுள் எழும் உமது தூண்டுதலே.

    'நாங்கள் எதையும் உம்மிடம் கேட்க வேண்டியதே இல்லை. ஏனெனில், எங்களுக்கு எது தேவை என்பதை அவை எங்கள் உள்ளத்தில் தோன்றுவதற்கு முன்னரே நீர் அறிவீர்.

    'எங்களது தேவை பரம் பொருளாகிய நீரே உம்மை மட்டுமே, அதிகமாக எங்களுக்குக் கொடுப்பதன் மூலம் நீர் அனைத்தையும் எங்களுக்குத் தருகிறீர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்ணீர்ப் பூக்கள்

இந்தப் பூக்கள் ..... இந்தப் பூக்கள் .... 💧 உலகெங்கும் இதழாக  இந்தப் பூக்கள்  உதிர்ந்து விழுவது யாருக்காக? எந்த தேவ தேவனுடைய  கால்களை அர்ச்சிக்க இவை  கண்ணவிழ்க்கின்றன? அழகிய நிறமுமில்லாமல் மணமுமில்லாமல்  பூத்த உடனே உதிர்ந்து போகிற இவற்றை  யார் வாங்குவார்கள்? ◆ இவை  எவருக்கு வேண்டுமானாலும் வழங்கப்படுகிற  இலவசப் பூக்களா? இல்லை - கனமாகிப் போன மன அணைக்கட்டின்  கசிவு - வேதனையின் குண்டு விளையாட்டு. காய்ந்த நினைவுகளில் வேர்பிடித்துக்  கலங்கும்  இதயச் செடியின் காணிக்கை! ◆ துக்கத்திற்கு அடையாளச் சின்னம்  கறுப்பல்லவா ... ஏன் இந்த விழி வெள்ளைக் கொடி பிடிக்கிறது? சண்டை பிடிக்க முடியாத போது  சமரசம் செய்து கொள்ள  சமாதானப் புறா தயாராகிறதா? ◆ துக்கக் கதவுகளைத் திறந்துவிட்டு  தூக்கக் கதவுகளை அடைத்துக்கொள்ளும் சாவி  இதனிடம்தான் இருக்கிறது. ◆ வாசனை இல்லாத இந்தப் பூக்கள்தான்  இதயமுள்ள எந்த மனிதனையும்  இன்னொருவர்க்காக ஈரப்படுத்தும் . ◆ இந்த நீர்ப்பூக்களைக் கொடுக்...

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலித்துப்பார்  உன்னைச் சுற்றி  ஒளிவட்டம் தோன்றும் உலகம் அர்த்தப்படும்  ராத்திரியின் நீளம்  விளங்கும்  உனக்கும்  கவிதை வரும்  கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான் உன் பிம்பம் விழுந்தே  கண்ணாடி உடையும்  கண்ணிரண்டும்  ஒளிகொள்ளும்  காதலித்துப்பார்  *** தலையணை  நனைப்பாய்  மூன்றுமுறை பல்துலக்குவாய்  காத்திருந்தால்  நிமிஷங்கள் வருஷமென்பாய்  வந்துவிட்டால்  வருஷங்கள் நிமிஷமென்பாய்  காக்கைகூட உன்னை  கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிப்பதாய்  உணர்வாய்  வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்  உருவமில்லா உருண்டையொன்று  உருளைக் காண்பாய்  இந்த வானம் இந்த அந்தி  இந்த பூமி இந்தப் பூக்கள்  எல்லாம்  காதலை கௌரவிக்கும்  ஏற்பாடுகள் என்பாய்  காதலித்துப் பார்  *** இருதயம் அடிக்கடி  இடம்மாறித் துடிக்கும்  நிசப்த அலைவரிசைகளில்  உனது குரல் மட்டும்  ஒலிபரப்பாகும...

வணக்கம் வள்ளுவ!

  எட்டாவது சீர்.... ஏழாவது சுரம் கதவை இழுத்து மூடியதால் எட்டாவது சுரம்  ஏமாந்து திரும்பியிருக்கலாம் ஆனால் இசை தேவதை ஆலாபனை நிறுத்திவிட்டுக் கதவைத் திறக்க ஓடியிருக்க மாட்டாளா? ஏழு வண்ண வில் எழுதி வைத்திருக்கலாம் வாசலில் 'எட்டாவது வண்ணத்திற்கு இங்கு இடம் இல்லை!' அதற்காக உறங்க முடியாத வானம் நிறங்கள் நீங்கிய இரவுப் படுக்கையில் வருந்தி அழுதிருக்காதா? வாரத்திற்குள் வந்துவிடத் துடித்த  எட்டாவது கிழமை  ஞாயிறு அந்தியில் தீக்குளித்திருக்கலாம் அதனால்  மாதத்தின் மார்பு துடித்து வெடித்திருக்காதா? வள்ளுவ!  எட்டாவது சீர் உன்னைத் தேடி வந்தபோது என்ன செய்தாய்? 'போடுவதற்கு ஒன்றுமில்லை போ' என்று வாசல் யாசகனை வீடுகளில் விரட்டுவதுபோல் விரட்டி விட்டாயா? எட்டாவது சீர் ஏன் உனக்குத் தேவைப்படவில்லை? யாப்பு கூப்பிட்டு மிரட்டியதால் ஏற்பட்ட அச்சமா? ஏழு சீர்களிலேயே ஒளி தீர்ந்து போனதா? - ஈற்று முச்சீரடியில் உனக்கும் மூச்சு முட்டியதா?l 'காசும்' 'பிறப்பும்' உன்முன் வந்து கண்களைக்  கசக்கினவா? 'நாளும்' 'மலரும்' நச்சரித்தனவா? இல்லை, எட்டாவது சீர்தான் அடுத்த குறளின் முதற் சீர...